இரவு தூங்கும் முன் முகத்திற்கு தேங்காய் எண்ணெய்!! சருமத்தை எப்படி மாற்றும் தெரியுமா?
இரவில் தூங்க செல்வதற்கு முன் முகத்தில் தேங்காய் எண்ணெய் தடவினால் நன்மைகள் கிடைக்குமா? என்பதைக் குறித்து இங்கு காணலாம்.
இரவில் தூங்க செல்வதற்கு முன் முகத்தில் தேங்காய் எண்ணெய் தடவினால் நன்மைகள் கிடைக்குமா? என்பதைக் குறித்து இங்கு காணலாம்.
Benefits of Applying Coconut Oil on Face at Night : அழகாக இருக்க யாரு தான் விரும்ப மாட்டார்கள்? அதுவும் குறிப்பாக பெண்கள் எப்போதும் அழகாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். இதற்காக அவர்கள் சந்தையில் கிடைக்கும் விலையுயர்ந்த பலவிதமான அழகுச்சாதன பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். ஆனால் அவற்றை பயன்படுத்தினால் கூட இன்னும் எளிமையாக இருக்க வேண்டுமென்று ஏங்குகிறார்கள். உங்களுக்கு தெரியுமா? விலையுயர்ந்த கிரீம்கள் மற்றும் சீரம்கள் இல்லாமல் கூட, உண்மையான வயதை விட இளமையாகவும், சுருக்கங்கள் இல்லாமல் எப்போதும் இளமையாக தோற்றம் அளிக்கக்கூடிய ஒரு எண்ணெய் உள்ளது. அது வேறு ஏதும் இல்லைங்க தேங்காய் எண்ணெய் தான். சரி இப்போது தேங்காய் எண்ணெயை முகத்தில் தடவுவதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் அதை எப்போது பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
நம்முடைய பாட்டி காலத்திலிருந்தே தேங்காய் எண்ணெய் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏனென்றால் அதில் பல நல்ல குணங்கள் உள்ளன. தேங்காய் எண்ணெயை தலை முடிக்கு பயன்படுத்தினால் முடி உதிர்தல் குறைந்து, முடியை கருமையாக்கும் மற்றும் மென்மையாகவும் பளபளப்பாகவும் மாற்ற உதவுகிறது. ஆக மொத்தம் தேங்காய் எண்ணெய் முடி ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். அதனால்தான் இன்று வரை பலர் தேங்காய் எண்ணெயை பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் உண்மையில் தேங்காய் எண்ணெய் கூந்தலுக்கு மட்டுமல்ல, சருமத்திற்கும் நன்மை பயக்கும்.
இதையும் படிங்க: இரவு தூங்கும் முன் 'இத' மட்டும் செய்ங்க.. காலையில முகம் பளபளப்பாக இருக்கும்..!
நிபுணர்களின் கூற்றுப்படி, தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு பயன்படுத்துவது ரொம்பவே நல்லது. முக்கியமாக இது சருமம் வறண்டு போவதை தடுக்க உதவுகிறது. மேலும் தோல் பிரச்சினைகளை குறைக்கவும் இது பயன்படுத்தப்படுகிறது. இப்போது தேங்காய் எண்ணெயை முகத்தில் எப்படி தடவ வேண்டும் என்பதை தெரிந்து பார்க்கலாம்.
இதையும் படிங்க: இரவு முகத்தில் இந்த '1' பொருளை தடவி பாருங்க.. முகம் தகதகனு மாறிடும்!
தோல் பிரச்சினைகளை குறைக்கும் : சருமத்திற்கு பயன்படுத்துவது மிகவும் நல்லது. இது தோல் பிரச்சினைகளை விரைவாக குறைக்க உதவுகிறது. முக்கியமாக தேங்காய் எண்ணெய் சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கும். இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சருமத்தின் வறட்சி மற்றும் தடித்தலை குறைக்கும்.
சருமத்தை ஈரப்பதமாக வைக்கும் : தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு நல்ல ஊட்டச்சத்தை வழங்குகிறது. இந்த எண்ணெயில் பல வைட்டமின்கள், வலி நிவாரணி, அலர்ஜி எதிர்ப்பு மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை சருமத்திற்கு ஈரப்பதத்தை அளிக்கின்றது. முக்கியமாக குளிர் காலத்தில் சருமம் வறண்டு போவதை தடுக்க உதவுகிறது.
வயதாவதை மெதுவாக்கும் : தேங்காய் எண்ணெயில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு, அலர்ஜி எதிர்ப்பு மற்றும் ஈரப்பதமூட்டும் பண்புகள், சரும பிரச்சினைகளைக் குறைத்து, கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து, சருமம் வறண்டு போவதை மெதுவாக்குகிறது.
உங்களது முகம் வறண்டிருந்தால் தேங்காய் எண்ணெய் உங்களது சருமத்திற்கு நல்ல ஊட்டச்சத்தை அளிக்கிறது. மேலும் இது ஒரு நல்ல மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது. தேங்காய் எண்ணெயை கற்றாழை ஜெல், அரிசி நீர் மற்றும் கிளிசரின் ஆகியவற்றுடன் கலந்து கிரீம் போல் தயாரித்து பயன்படுத்தலாம். இல்லையெனில் வெறும் தேங்காய் எண்ணெயை மட்டும் இரவு தூங்கும் முன் உங்களது முகத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும்.