முகத்தை பளிச் என்று வைத்துக் கொள்ள வீட்டிலுள்ள கடலை மாவு 1 போதுமே! 4 விதமான ஸ்கின்னுக்கும் பேஸ் பேக் ரெடி!

First Published Mar 9, 2023, 8:03 AM IST

இன்று நாம் அழகு என்றால் வெளியில் சென்று செலவு செய்தால் தான் நமக்கு வரும் அப்படிங்கிற ஒரு எண்ணத்தில் உள்ளோம். ஆனால் நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே முகத்தை பளிச் என்று வைத்துக் கொள்ள என்னென்ன பொருட்களை,எப்படி பயன்படுத்தலாம் என்பதை தான் இன்றைய பதிவில் நாம் பார்க்க உள்ளோம்.

முகம் பளிச் என்று இருந்தாலே அது ஒரு அழகுத் தான். கருப்போ , மாநிறமோ, வெள்ளையோ எப்படி பட்ட ஸ்கின் டோன் ஆகா இருந்தாலும் அனைவரும் முகத்தை பளிச் என்று வைத்துக் கொள்ள தான் விரும்புவார்கள்.
முகம் எப்போதும் பொழிவா இருப்பதற்கு ,பார்த்த உடனே பளிச் என்று வைத்துக் கொள்ள நிறைய செலவு செய்ய வேண்டும், அதற்காக தனியா நாம நிறைய பவுடர், க்ரீம் போன்றவற்றை பூசி தான் நம்மளை நாம் மெருகேத்திக்கணும் அப்படின்றதெல்லாம் தேவை இல்லைங்க.

வீட்டிலேயே நாம் அன்றாடம் பயன்படுத்தும் சில பொருட்களை வைத்தே ரொம்ப ஈஸியா ரொம்ப அழகா நம்மை நாம் பராமறி க்கலாம். நம் பாட்டி காலத்தில் என்ன வீதிக்கு வீதி பார்லர் இருந்ததா என்ன? எல்லார் வீட்டிலும் அழகுக் குறிப்பு சொல்ல ஒரு பாட்டியோ,பெரியவங்க இருப்பார்கள். அவர்கள் சொல்லும் குறிப்புக்களை ஃபாலோ செய்து அழுகு படுத்திக் கொண்டோம்

ஆனால் இன்று நாம் அழகு என்றால் வெளியில் சென்று செலவு செய்தால் தான் நமக்கு வரும் அப்படிங்கிற ஒரு எண்ணத்தில் உள்ளோம். ஆனால் நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே முகத்தை பளிச் என்று வைத்துக் கொள்ள என்னென்ன பொருட்களை,எப்படி பயன்படுத்தலாம் என்பதை தான் இன்றைய பதிவில் நாம் பார்க்க உள்ளோம்.

கடலை மாவு:

அழகிற்கு கடலை மாவு மாதிரி ஒரு நல்ல பொருள் எதுவுமே இல்ல என்று கூறலாம். எல்லாருடைய வீட்டிலும் கடலை மாவு வச்சிருப்போம்.இதனை பேக் செய்து நம் முகத்தில் அப்பளை செய்து முகத்தை மெருகேற்றலாம்.நம் அனைவருக்கும் ஒரே விதமான ஸ்கின் இருப்பது இல்லை என்பதால் ஒவ்வொரு ஸ்கின் டைப்பிற்கும் ஒவ்வொரு டிப்ஸ் கொடுக்கப் பட்டுள்ளது. அவை என்ன என்பதை காணலாம்.


 

ட்ரை ஸ்கின்:

ட்ரை ஸ்கின் உள்ளவர்கள் 2 ஸ்பூன் கடலை மாவுடன் , 1 ஸ்பூன் அலோவேரா ஜெல் அல்லது 1 ஸ்பூன் வாழைப்பழம் ஆகியவற்றை மிக்ஸ் செய்து பேக் செய்து முகத்தில் அப்பளை செய்ய வேண்டும்

சென்சிட்டிவ் ஸ்கின்:

2 ஸ்பூன் கடலை மாவுடன் , 2 ரோஸ் பெடல்ஸ் 2 மற்றும் ஸ்பூன் ரோஸ் வாட்டர் ஆகியவற்றை மிக்ஸ் செய்து பேக் செய்து முகத்தில் அப்பளை செய்து கொள்ளலாம்.

வெறும் வயிற்றில் சுரைக்காய் ஜூஸ் குடித்தால்.. அடிக்குற வெயிலுக்கு உங்க கொழுப்பு வெண்ணெய் மாதிரி கரைஞ்சிடும்

ஆயில் ஸ்கின்:

ஆயில் ஸ்கின் உள்ளவர்கள் 2 ஸ்பூன் கடலை மாவுடன் , 1 ஸ்பூன் டீ டிக்காஷன்  ஊற்றி பேக் போன்று செய்து முகத்தில் அப்பளை செய்து கொள்ளலாம்.

நார்மல் ஸ்கின்:

நார்மல் ஸ்கின் உள்ளவர்கள் கடலை மாவுடன் தேங்காய் எண்ணெய் மற்றும் சிறிது முல்தானி மெட்டி சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் அப்பளை செய்து பின் முகத்தை குளிர்ந்த தண்ணீரில் அலசிக் கொள்ளலாம்.

பரு உள்ளவர்கள்:

ஒரு சிலருக்கு பரு அதிகமாக காணப்படும். அவரகள் கடலை மாவில் சிறிது க்ரீன் டீ ஊற்றி மிக்ஸ் செய்து அதனை பேக் செய்து அப்பளை பண்ணி வர பருக்கள் இருந்த இடம் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கும்.

இவைகளை வாரம் 1 முறை அல்லது 2 முறை செய்து கொள்ளலாம். இவைகளை அப்ளை செய்த பிறகு முகம் வர வரவென்று இழுக்கும்.பின் முகத்தை குளிர்ந்த தண்ணீரில் கழுவும் போது, முகத்தில் இருக்கும் டெத் செல்ஸ் நீங்கி முகம் பொலிவு பெரும்.

click me!