திமுகவுடன் எடப்பாடி பழனிசாமி கள்ளக்கூட்டணி வைத்திருப்பது தெரிந்துவிட்டது. பச்சோந்தி யார் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும். தேனி தொகுதியில் இங்கு ஜெயித்துவிடக் கூடாது என்பதற்காகவே அதிமுக, திமுகவுக்கு உதவுகிறது. அதற்கு ஆதரவாக கொடநாடு கொலை வழக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. நான் பிரதமர் வேட்பாளர் மோடியை முன்னிருத்தி வாக்கு சேகரிக்கிறேன். திமுக-வில் பிரதமர் வேட்பாளர் யார் என டிடிவி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.