தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்திருப்பவர் பா.இரஞ்சித். இவர் இயக்கத்தில் தற்போது தங்கலான் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் சீயான் விக்ரம் நாயகனாக நடித்துள்ளார். கே.ஜி.எப்-ஐ மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. இதில் விக்ரமுடன் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.