இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக உருவெடுத்து இருப்பவர் மாரி செல்வராஜ். அவர் இயக்கிய பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய மூன்று படங்களும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதோடு, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. இப்படி ஹாட்ரிக் ஹிட் கொடுத்த மாரி செல்வராஜ், அடுத்ததாக இயக்கியுள்ள திரைப்படம் தான் வாழை. இப்படத்தை அவரது மனைவி திவ்யா தான் தயாரித்து உள்ளார்.