தமிழில் பேட்ட, மாஸ்டர், மாறன் போன்ற படங்களில் நடித்து பேமஸ் ஆனவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் நடிப்பில் தற்போது தங்கலான் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை பா.இரஞ்சித் இயக்கி உள்ளார். இப்படத்தில் சீயான் விக்ரம் நாயகனாக நடித்துள்ளார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைத்துவிட்டாலும், அதன் ரிலீஸ் தேதியை அறிவிக்காமல் படக்குழு காலம் தாழ்த்தி வருகிறது.
அதேபோல் தங்கலான் படத்தில் டப்பிங் பேசி இருக்கிறீர்களா என்கிற கேள்விக்கு ஆம் என பதிலளித்த மாளவிகா, அதை ஆடியன்ஸ் எவ்வாறு ஏற்றுக்கொள்ள உள்ளார்கள் என்பதை பார்ப்பதற்கு ஆர்வமுடன் இருப்பதாக கூறி உள்ளார்.
உங்களின் செலிபிரிட்டி கிரஷ் யார் என்கிற கேள்விக்கு பதிலளித்த மாளவிகா, கஹோ நா பியார் ஹெ படம் வந்தபோது ஹிருத்திக் ரோஷன் மீது அதிகளவு கிரஷ் இருந்தது என கூறினார்.
எப்போதும் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்துவது ஏன் என்கிற கேள்விக்கு, தனக்கு கவர்ச்சி மிகவும் பிடிக்கும் என கூலாக பதிலளித்து உள்ளார் மாளவிகா மோகனன்.
அதேபோல் ரசிகர் ஒருவர் எப்போ கல்யாணம் என கேட்ட கேள்விக்கு, எனக்கு கல்யாணம் ஆவதை பார்ப்பதற்கு ஏன் இவ்வளவு அவசரப்படுகிறீர்கள் என கேட்டிருக்கிறார் மாளவிகா மோகனன்.