மகளிர் உரிமைத்தொகை.. 57 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கு இதுதான் காரணம்.! வெளியான தகவல்!

Published : Sep 12, 2023, 12:10 PM IST

மகளிர் உரிமைத் தொகைக்கு 1 கோடியே 63 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் இதில்,  1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் 57 லட்சம் பேரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட நிலையில் அதற்கான காரணமும் வெளியாகியுள்ளது. மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்தவர்களில் மூன்று லட்சம் பேர் அரசு பணியில் இருக்கும் மகளிர் என்பதால் அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

PREV
15
மகளிர் உரிமைத்தொகை..  57 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கு இதுதான் காரணம்.! வெளியான தகவல்!

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ம் தேதி தகுதி வாய்ந்த பெண்களுக்கு உரிமைத் தொகை அவர்களது வங்கிக் கணக்கில் மாதம் தோறும் செலுத்தும்  வகையில் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. ஏ.டி.எம். கார்டுகள் முதற்கட்டமாக குறிப்பிட்ட எண்ணிக்கையிலும், படிப்படியாக விரைவில் அனைவருக்கும் வழங்கப்பட உள்ளது. ஆனால் ஏ.டி.எம். கார்டு வழங்கப்படுவதற்காக காத்திருக்காமல், தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. பயனாளிகளுக்கு பணத்தை எடுப்பதில் எந்த சிக்கலும் ஏற்படக் கூடாது, அதிலும் கவனமாக இருக்க வேண்டும்.

25

அதேபோல், வரும் 15-ஆம் தேதி, என்னுடைய சார்பில் மகளிருக்கு அனுப்பி வைக்கப்படும் குறுஞ்செய்தியில், பணம் எடுப்பது தொடர்பாக ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால், அதுகுறித்து தகவல் தெரிவிக்க வேண்டிய Toll-Free எண்ணும் அறிவிக்கப்பட இருக்கிறது. அப்படியானால் மற்றவர்களது கோரிக்கைகள் ஏன் ஏற்கப்படவில்லை என்பதை நாம் அவர்களுக்குச் சொல்லியாக வேண்டும். எந்த அடிப்படையில் உங்களது கோரிக்கையை எங்களால் ஏற்க முடியவில்லை என்பதற்கான காரணத்தை குறிப்பிட்டு அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியாக வேண்டும். அப்படி அனுப்பினால் பெரும்பாலானவர்கள் மனநிறைவு அடைவார்கள்.

35

சிலருக்கு சந்தேகங்கள் இருக்கலாம் - மறுபடியும் நம்மிடம் விண்ணப்பிப்பார்கள். அவர்களுக்கும் அத்தகைய வாய்ப்பை நாம் வழங்க வேண்டும். வாய்ப்பை வழங்கினால் பொதுமக்களுக்கு அரசின் மீது மிகுந்த நம்பிக்கை ஏற்படும். பணம் கிடைக்காத மகளிர் யாராவது அந்த இடத்துக்கு வந்து கேட்டால், பதில் சொல்வதற்கான ஏற்பாடு செய்யப்பட வேண்டும். தனியாக இதற்கென அலுவலர்களை உட்கார வைத்து, இப்படி கேட்க வரும் மகளிரிடம் கோரிக்கை மனுக்களை வாங்கி, நாங்கள் பரிசீலிக்கிறோம் என்பதைச் சொல்லி அனுப்பி வைக்க வேண்டும்.

45

இதனிடையே, மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்த 57 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், அதற்கான காரணங்கள் வெளியாகியுள்ளன. மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்தவர்களில் மூன்று லட்சம் பேர் அரசு பணியில் இருக்கும் மகளிர் என்பதால் அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

55

இதே போன்று, ஆண்டிற்கு 3, 600 யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் மகளிரும் விண்ணப்பத்திருந்ததாக கூறப்படுகிறது. சொந்தமாக கார் வைத்துள்ளவர்களும் விண்ணப்பத்திருந்த நிலையில், அவர்களது விண்ணப்பம் நிகாரிக்கப்பட்டுள்ளது. 
 

Read more Photos on
click me!

Recommended Stories