வில்லங்கமான பரிகாரமா இருக்கே... போலி சாமியாரின் வலையில் சிக்குவாரா தீபா? கார்த்திகை தீபம் சீரியல் ட்விஸ்ட்

Published : Jun 28, 2024, 03:00 PM IST

கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் ரம்யாவும் தீபாவும் சாமியாரை பார்க்க வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

PREV
14
வில்லங்கமான பரிகாரமா இருக்கே... போலி சாமியாரின் வலையில் சிக்குவாரா தீபா? கார்த்திகை தீபம் சீரியல் ட்விஸ்ட்
Karthigai deepam serial

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரம்யாவும் தீபாவும் சாமியாரை பார்க்க வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, சாமியார் உங்க பிரச்சனை சரியாகணும்னா தண்ணீரில் மிதக்கும் பரிகாரம் ஒன்று இருக்கு என்று சொல்ல, தீபா தனக்கு நீச்சலும் தெரியாது, தண்ணீரில் மிதக்கவும் தெரியாது என்கிறாள், ரம்யாவும் என்ன நீங்க இவ்வளவு கஷ்டமானதை பரிகாரம்னு சொல்றீங்க என்று கேட்கிறாள். 

24
Zee Tamil Karthigai deepam serial

சாமியார் பீப்பாயில் உட்கார வைத்து தண்ணீரில் மிதக்க விடுவோம். காலையில் இருந்து சூரிய அஸ்தமனம் வரைக்கும் நம்பிக்கையான ஒருவரிடம் பீப்பாயில் கட்டிய கயிறை கொடுத்து விடுவோம்.. இந்த பரிகாரத்தை செய்யலனா நான் சொல்ற மாதிரி தான் நடக்கும் சொல்லி பயம் காட்டுகிறார். அடுத்து ஐஸ்வர்யா வீட்டில் உடம்பு முடியாமல் படுத்து இருக்க, அருணாச்சலம் அவளை கூப்பிட்டபடி இருக்க, ஐஸ்வர்யா அப்படியே படுத்து இருக்க, அவரும் ரூமுக்குள் வந்து நான் கூப்பிட்டு கொண்டே இருக்கேன், நீ இப்படி படுத்து இருக்க, அங்க அபிராமி ஹாஸ்பிடலில் இருக்கா நீ ஹாயா தூங்கிட்டு இருக்க என்று கோபப்படுகிறார். 

இதையும் படியுங்கள்... செளந்தரபாண்டி போட்ட டிராமா எல்லாம் வேஸ்ட்... ஷண்முகம் தந்த ட்விஸ்டால் பதவியேற்ற பரணி - அண்ணா சீரியல் அப்டேட்

34
Karthigai deepam serial Update

ஐஸ்வர்யா அத்தைக்காக வேண்டிக்கிட்டு அலகு குத்திய விஷயத்தை சொல்ல, அருணாச்சலம் இதை முதல்லயே சொல்லி இருக்கலாம்ல என்று மனம் இறங்குகிறார், ஐஸ்வர்யா என்ன விஷயம் என்று கேட்க, அருணாச்சலம் பீரோவில் இருந்து பணம் எடுக்கணும் என்று சொல்வதோடு நீ ரெஸ்ட் எடு, நானே எடுத்துகிறேன் என்று சொல்கிறார். ஐஸ்வர்யா பணம் என்றதும் நானே எடுத்து தருகிறேன் என்று சாவியை வாங்கி போய் பீரோவை திறக்க பீரோ முழுவதும் நகையும் பணமுமாக இருப்பதை பார்த்து வாயை பிளக்கிறாள். 

44
Karthigai deepam serial Today Episode

தனது அம்மாவுக்கு வீடியோ கால் செய்து காட்ட, அவள் மொத்தத்தையும் ஆட்டைய போட்டுடலாம் நான் கிளம்பி வரேன் என்று சொல்ல, ஐஸ்வர்யா இப்போ எதுவும் செய்ய முடியாது, சந்தேகம் வராத மாதிரி செய்யணும் அதுக்கு ஐடியா சொல்லு என்று கேட்க, ராஜேஸ்வரி ஒரு ஐடியா சொல்கிறாள். பிறகு ஐஸ்வர்யா பணத்தை கொண்டு போய் அருணாச்சலத்திடம் கொடுக்க, அவர் பணத்தை மட்டும் வாங்கி கொண்டு சாவியை மறந்து செல்ல, ஐஸ்வர்யா சந்தோசப்படுகிறாள், இந்த நேரம் பார்த்து மீனாட்சி அங்கு வந்து சாவியை கேட்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

இதையும் படியுங்கள்... வளர்ப்பு மகனால் வந்த பிரச்சனை... ஜெயம் ரவி விவாகரத்து விவகாரத்தில் புது குண்டை தூக்கிப் போட்ட பிரபலம்..!

Read more Photos on
click me!

Recommended Stories