தற்போது கோடை காலம் என்பதால், வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. இதனால் மக்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிப்பார்கள். அதுவும் தூங்குவதற்கு முன் குளிப்பதை பலர் விரும்புகிறார்கள். இரவில் குளிப்பது பல ஆரோக்கிய நன்மைகளை பெறலாம்.
மேலும் இது ஒரு நல்ல பழக்கம், ஏனென்றால் நாள் முழுவதும் வெளியில் இருக்கும் போது தூசி மற்றும் கிருமிகளை படுக்கைக்குச் செல்லும் முன் கழுவுவது நல்லது. இப்போது தூங்குவதற்கு முன் ஏன் குளிக்க வேண்டும் மற்றும் அதன் ஆரோக்கிய நன்மைகள் என்ன என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.
சருமத்திற்கு நல்லது: இரவு தூங்க செல்வதற்கு முன் குளிப்பது சருமத்திற்கு மிகவும் நல்லது. ஏனெனில், இது உடலில் உள்ள அனைத்து கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களை அகற்றும். இதனால் உடலில் இருந்து பாக்டீரியா தொற்று மற்றும் தோல் பிரச்சனை குறையும்.
இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்: உங்கள் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த தூங்கும் முன் குளிப்பது மிகவும் நல்லது. இரவில் குளிப்பதால் உடலில் ரத்த ஓட்டம் சீராகும். மேலும் உடல் உஷ்ணம் அதிகரிப்பதை, கட்டுப்பாட்டில் வைத்திருக்க இரவில் குளிப்பது மிகவும் அவசியம்.
உடல் எடையை குறைக்கும்: தூங்கும் முன் குளித்தால் உடல் எடையை குறைக்க உதவுகிறது. அது மட்டுமின்றி, இரவில் குளிப்பது ஒற்றைத் தலைவலி, உடல்வலி, மூட்டு வலி மற்றும் பெரிய தசைப்பிடிப்பு போன்றவற்றிலிருந்தும் நிவாரணம் பெறலாம். எனவே, இவ்வளவு நன்மைகள் கிடைப்பதால், தூங்கும் முன் குளிக்க மறக்காதீர்கள்...!
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D