FIFA : "மெஸ்ஸியும் அர்ஜென்டினாவும் வெளியேறக் கூடாதுன்னு FIFA நினைச்சது!" - எகிப்து கோச் பகீர் குற்றச்சாட்டு

Published : Jul 08, 2026, 10:04 AM IST

FIFA Controversy : நடப்பு உலக சாம்பியனான அர்ஜென்டினாவை விட நாங்கள் எல்லா விதத்திலும் சிறப்பாக விளையாடினோம். ஆனால், களத்தில் எடுக்கப்பட்ட சில முடிவுகளும், வெளியிலிருந்து வந்த தலையீடுகளும்தான் ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிட்டது.

PREV
14
Argentina vs Egypt match

ஃபிஃபா உலகக் கோப்பையில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினாவிடம் போராடித் தோற்ற நிலையில், கால்பந்து உலகையே உலுக்கும் ஒரு பகீர் குற்றச்சாட்டை எகிப்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஹொசாம் ஹசன் முன்வைத்துள்ளார். சூப்பர் ஸ்டார் லியோனல் மெஸ்ஸியும், அர்ஜென்டினாவும் இந்த தொடரில் நீடிக்க வேண்டும் என ஃபிஃபா விரும்பியதாகவும், போட்டியின் முடிவு வெளி சக்திகளால் முன்பே தீர்மானிக்கப்பட்டு விட்டதாகவும் ஹசன் குற்றம் சாட்டியுள்ளார். ப்ரீ-குவார்ட்டர் ஃபைனலில் நடந்த இந்த பரபரப்பான போட்டியில், இரண்டு கோல்கள் முன்னிலை பெற்றிருந்த எகிப்து அணி, இறுதியில் 3-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்தது.

உலகக் கோப்பை வரலாற்றிலேயே மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்றை நோக்கி எகிப்து சென்று கொண்டிருந்தபோது, ஆட்டத்தின் கடைசி 13 நிமிடங்களில் மூன்று கோல்களை அடித்து அர்ஜென்டினா முன்னேறியது. போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஹொசாம் ஹசன், நடுவரின் செயல்பாடுகள் முற்றிலும் அர்ஜென்டினாவுக்கு சாதகமாக இருந்ததாகக் கூறினார்.

24
கோச் ஆதங்கம்

செய்தியாளர் சந்திப்பில் மிகவும் காட்டமாகப் பேசினார் ஹசன். "நடப்பு உலக சாம்பியன்களை விட நாங்கள் எல்லா விதத்திலும் சிறப்பாக விளையாடினோம். ஆனால், களத்தில் எடுக்கப்பட்ட சில முடிவுகளும், வெளியிலிருந்து வந்த தலையீடுகளும் ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிட்டன. இதன் பின்னால் பெரிய வர்த்தக, மார்க்கெட்டிங் நலன்கள் இருக்கலாம். கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்றவர்கள் இந்த தொடரில் இருக்க வேண்டும், மெஸ்ஸி உலகக் கோப்பையில் தொடர வேண்டும் என அவர்கள் விரும்பியிருக்கலாம். கால்பந்தில் சில நேரங்களில் தொழில்நுட்ப அம்சங்களைத் தாண்டி இதுபோன்ற விஷயங்கள் நடக்கும். உலக சாம்பியன்களுக்கு எல்லா மட்டத்திலிருந்தும் ஆதரவு கிடைத்தது" என்றார்.

34
ஹசன் குற்றச்சாட்டு

இந்தப் போட்டியில் நடுவர் ஃபிரான்சுவா லெடெக்ஸியரின் பல முடிவுகள் எகிப்து அணிக்கு கோபத்தை ஏற்படுத்தியது. தாங்கள் இரண்டாவது கோல் அடித்து முன்னிலை பெற்றபோது, VAR தலையீட்டின் மூலம் அந்த கோல் ரத்து செய்யப்பட்டது முக்கிய சர்ச்சையானது. மேலும், பெனால்டி பாக்ஸில் முகமது சாலாவை ஃபவுல் செய்ததற்கு பெனால்டி வழங்கப்படவில்லை. போட்டியின் கூடுதல் நேரத்தில் என்சோ ஃபெர்னாண்டஸ் அர்ஜென்டினாவின் வெற்றிக் கோலை அடிப்பதற்கு சற்று முன்பு, எகிப்து வீரர் ஹம்தி ஃபத்தியின் ஜெர்சியை அலெக்சிஸ் மேக் அலிஸ்டர் பிடித்து இழுத்தபோதும், நடுவர் அதைக் கண்டுகொள்ளவில்லை அல்லது VAR சோதனைக்குக் கூட செல்லவில்லை என்று ஹசன் குற்றம் சாட்டினார்.

44
தகுதியில்லாத வெற்றி

அர்ஜென்டினா தரப்பில் இருந்து வந்த அழுத்தங்களுக்கு நடுவர் பணிந்துவிட்டதாக எகிப்து கருதுகிறது. "எங்களுக்கு தகுதியான நீதி கிடைக்கவில்லை. வாழ்க்கை அநீதியானது என்று தெரியும், ஆனால் விளையாட்டுத் துறையிலும் ஏன் இந்த அநீதி?" என்று ஹசன் கேள்வி எழுப்பினார். "இது அர்ஜென்டினா அணிக்கு முற்றிலும் தகுதியில்லாத வெற்றி. போட்டி முடிந்தவுடன் நான் நடுவரிடம் நேரடியாகவே இது அநீதி என்று சொன்னேன். இனி நான் என் நாட்டுக்குத் திரும்பப் போகிறேன்.

அதன்பிறகு, இந்த உலகக் கோப்பையில் ஒரு போட்டியைக்கூட நான் பார்க்க மாட்டேன். ஏனென்றால் இந்தத் தொடரில் எந்தவிதமான நீதியும் இல்லை. இதுதான் என் எதிர்ப்பு" என்றார். போட்டியின் போது நடுவரின் சர்ச்சைக்குரிய முடிவுகளை எதிர்த்து, ஃபிஃபாவின் இனவெறிக்கு எதிரான சைகையைக் காட்டியதற்காக ஹொசாம் ஹசனுக்கு மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது. ஃபிஃபா மற்றும் நடுவர் செயல்பாடுகள் மீது வெளிப்படையாக ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதால், எகிப்து பயிற்சியாளர் மீது ஃபிஃபா கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகளை எடுக்க வாய்ப்புள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories