பஸ் ஸ்டாண்ட் அருகே கிடந்த மர்ம பார்சல்.. திறந்து பார்த்த போலீசார்.. அதிர்ச்சியில் டெல்லி

First Published Mar 19, 2023, 7:51 AM IST

டெல்லியில் பெண் கொல்லப்பட்டு பின்னர் பல துண்டுகளாக வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லி பேருந்து நிறுத்தம் அருகே பெண்ணின் மண்டை ஓடு, இடுப்பு, உள்ளங்கை பிளாஸ்டிக்கால் சுற்றப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. பெண் கொல்லப்பட்டு பின்னர் பல துண்டுகளாக வெட்டப்பட்டு, பிளாஸ்டிக் பையில் போட்டு அப்புறப்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

டெல்லியின் சராய் காலே கான் பகுதியில் உள்ள பேருந்து நிலையம் அருகே இன்று அதிகாலை துண்டாக்கப்பட்ட மனித உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், சடலத்தை அடையாளம் காண ஒரு குழு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. மீட்கப்பட்ட தலைமுடியில் இருந்து சடலம் பெண்ணின் சடலமாக இருக்கலாம் என பொலீஸார் சந்தேகிக்கின்றனர்.

இதையும் படிங்க..1 நிமிஷத்துக்கு 5 லட்சம் கொடுங்க.! மாப்பிள்ளையிடம் ரகசிய டீல் போட்ட நடிகை ஹன்சிகாவின் தாய்

பாதிக்கப்பட்டவர் கொல்லப்பட்டு பின்னர் பல துண்டுகளாக வெட்டப்பட்டு, பிளாஸ்டிக் பையில் போட்டு அப்புறப்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. உடல் உறுப்புகள் அழுகி துர்நாற்றம் வீசத் தொடங்கியதையடுத்து அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பைகளை திறந்து பார்த்ததில் ஒரு பெண்ணின் மண்டை ஓடு, இடுப்பு பகுதிகள் மற்றும் உள்ளங்கை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குற்றம் நடந்த இடத்தை தடயவியல் குழு ஆய்வு செய்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதையும் படிங்க..இரண்டாக பிரியும் ஆப்பிரிக்க கண்டம்.. புதிதாக உருவாகும் கடல் - யாரும் பார்த்திராத அதிசய நிகழ்வு

கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், வழக்கு பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் டெல்லியில் உள்ள மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க..ஒரே டார்ச்சர்.!! மகளின் தோழியிடம் ஆபாசமாக பேசிய தந்தை.. கடைசியில் தோழி எடுத்த அதிரடி முடிவு

click me!