பின்னர் 6-ம் தேதி காலை ராஜூ உடலை கைப்பற்றிய போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், சந்தேகத்திற்கு இடமாக இருசக்கர வாகனத்தில் மூட்டை ஒன்றுடன் ஒருவர் சுற்றி திரிவது பதிவாகி இருந்தது. அந்த வண்டியின் பதிவு எண்ணை வைத்து உதயகுமார் என்பவரை பிடித்த விசாரணை நடத்தினர். மேலும் சந்தேகத்தின் பேரில் மவுனிகாவிடமும் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தப்பட்டதில் கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவர் நல்லி ராஜூவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து கள்ளக்காதலன் உதயகுமார், மவுனிகா மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த மல்லிகார்ஜூன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.