திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 1 வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை சுமார் 110 மாணவர்களும், 129 மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் லட்சுமணன் ( 56) என்ற ஆசிரியர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஆண்டு முதல் பள்ளி மாணவிகளை அடிக்கடி அழைத்து தினமும் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது தொடர்பாக வெளியில் சொல்லக்கூடாது என மாணவிகளை மிரட்டியுள்ளார்.