மொபைல் போனுக்கு ஆசைப்பட்டு.. 4 காம கொடூரர்களால் சீரழிந்த பள்ளி மாணவியின் வாழ்க்கை!! அதிர்ச்சி சம்பவம்

First Published Mar 10, 2023, 8:28 AM IST

கர்நாடகாவில் செல்போன் தருவதாக கூறி சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செல்போன் தருவதாக கூறி சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. கர்நாடக மாநிலம் ஹுப்ளியில் கடந்த புதன்கிழமை மைனர் சிறுமி நான்கு பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார்.

குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரில் இருவருடன் பாதிக்கப்பட்ட சிறுமி நட்பு கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அந்த குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரில் இருவருடன் நட்பாக இருந்ததாகக் கூறப்படும் சிறுமிக்கு மொபைல் போன் வாங்கி தருவதாகக் கூறி நண்பர்களால்  அழைக்கப்பட சிறுமியும் சென்றிருக்கிறார்.

ஹுப்ளி பைபாஸ் ரிங் ரோடு பாலம் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. மைனர் பெண் சொந்த ஊரில் இருந்து ஹுப்ளிக்கு வரவழைக்கப்பட்டார். அங்கிருந்து பைக்கில் அழைத்துச் சென்ற குற்றவாளிகள், தனிமையான இடத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதையும் படிங்க..பிக் பாஸ் நட்சத்திரத்துக்கு ‘அந்த’ தொல்லை கொடுத்த பிரியங்கா காந்தியின் பிஏ.. வைரலாகும் வீடியோ !!

குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவர் காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட மற்ற இருவரின் அடையாளம் இன்னும் தெரியவில்லை. குற்றம் சாட்டப்பட்ட 4 பேர் மீதும் ஹூப்பள்ளி கோகுல் ரோடு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறுமிக்கு மொபைல் போன் வாங்கி தருவதாகக் கூறி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க..Kushboo: 8 வயதில் பாலியல் தொல்லை கொடுத்தார் என் தந்தை.. நடிகை குஷ்பு வெளியிட்ட பரபரப்பு தகவல்

click me!