இதனையடுத்து, அவரது நண்பர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, காணாமல் போன அன்று நிஷாந்த் தங்களுடன் மது அருந்திவிட்டு நண்பர் ஒருவரின் காரை எடுத்துக்கொண்டு வெளியே சென்றார். சிறிது நேரத்தில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு எஸ்.எம்.எஸ் ஒன்றை அனுப்பினார். அதில், ஏதாவது ஒரு ஏரியில் என் உடல் மிதக்கும் என தெரிவித்துள்ளார். அவரது கார் போரூர் ஏரி கரையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, கடந்த 3 நாட்களாக நிஷாந்த் உடல் தேடப்பட்டு வந்த நிலையில் இன்று அவரது உடல் மீட்கப்பட்டது.