இந்நிலையில் இதனை தடுக்கும் நோக்கில் அவர்களுக்கும் எச்சரிக்கும் விதமாகவும் ரவுடி மீதான துப்பாக்கி சூடு சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. கடந்த 20ம் தேதி திருச்சியில் துரைசாமி மற்றும் சாமி என்கிற சோமசுந்தரம் ஆகியோர் மீது ஏற்கனவே பல்வேறு கொலை கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் கைது செய்யப்பட்ட அவர்களிடமிருந்து நகைகளை மீட்க காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். அப்போது, உறையூர் குழுமாயி அம்மன் கோயில் அருகே சென்றபோது, போலீசாரின் ஜீப்பில் இருந்து இருவரும் தப்பிக்க முயன்றுள்ளனர். துரத்திப்பிடிக்க முயன்றபோது, போலீசார் மீது ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதையடுத்து தற்காப்புக்காக துரைசாமி மற்றும் சாமி என்கிற சோமசுந்தரம் ஆகியோர் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.