ஒரே நேரத்தில் 3 பேருடன் இயற்கைக்கு மாறாக உறவு இருக்க சொல்லி டார்ச்சர்! கதறிய மனைவி! எஸ்கேப்பான வயாகரா கணவர்.!

First Published Mar 4, 2023, 2:01 PM IST

கஞ்சா போதையில் இயற்கைக்கு மாறாக ஒரே நேரத்தில் 3 பேரும் உறவு இருக்க சொல்லி டார்ச்சர் சித்ரவதை செய்த கணவர் மீது கோவை பட்டதாரி பெண் பரபரப்பு புகார் அளித்ததை அடுத்து அவர் வெளிநாடு தப்பி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கோவையைச் சேர்ந்த 25 வயது பட்டதாரி பெண் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் கடந்த 2021ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. மாப்பிள்ளை வீட்டாருக்கு சீதனமாக 100 சவரன் தங்க நகை, 25 கிலோ வெள்ளி பொருட்கள் சீர்வரிசையாக பெண் வீட்டார் கொடுத்துள்ளனர். திருமணம் நடந்த சில நாட்களுக்கு பிறகு மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். மேலும், கணவருக்கு கஞ்சா புகைக்கும் பழக்கம் இருப்பதும், வயாகரா இல்லாமல் அவரால் தாம்பத்ய உறவில் ஈடுபட முடியவில்லை என்பதும் தெரியவந்தது. 

Porn video

இந்நிலையில் 2021ம் ஆண்டு உறவினர் வீட்டு திருமண விழாவுக்கு சென்ற இடத்தில், மனைவி உடை மாற்றிய போது, கணவர் நிர்வாணமாக அவரை போட்டோ எடுத்துள்ளார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் மேலே ஒரு துணியை சுத்திக்கொண்டு வெளியே ஓடி வந்தார். இதனை கண்ட மாமனார், மாமியார் ஆகியோர் சேர்ந்து வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று கணவரின் ரூமில் தள்ளி விட்டனர். ஆபாச வீடியோவை பார்க்க வைத்து இயற்கைக்கு மாறான முறையில் உறவு கொண்டார். 

இதையும் படிங்க;- இந்த படத்துல இருக்கிற மாதிரியே பண்ணணும்.. இயற்கைக்கு மாறாக உறவு இருக்க சொல்லி வயாகரா போட்டு கணவர் டார்ச்சர்

இந்நிலையில் 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் பீளமேடு அருகே நண்பரின் ஷெட்டுக்கு மனைவியை கணவர் அழைத்து சென்றுள்ளார். அப்போது, தனது செல்போனில் இருந்த ஆபாச வீடியோவை காண்பித்து இதே போல் மூன்று பேர் சேர்ந்து உறவில் ஈடுபட கட்டாயப்படுத்தியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த பெண் ஒருவழியாக அங்கிருந்து தப்பித்து தாய் வீட்டுக்கு வந்து விட்டார். 

பாதிக்கப்பட்ட பெண், மகிளா நீதிமன்றத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கடந்த வருடம் புகார் அளித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை அந்த பெண் புகார் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கூறுகையில்;- பாதிக்கப்பட்ட பெண் விசாரணை அதிகாரி பற்றி புகார் தெரிவித்தார். இதையடுத்து அந்தத பெண் அதிகாரியை மாற்றி வேறு அதிகாரியை நியமித்துள்ளேன் என்றார். 

அவரது கணவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். கைது செய்த உடனே முதல் வேலையாக நிர்வாண படங்களை அழிக்கிறோம் என கூறியுள்ளேன். அந்த பெண் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட 3 பேர் செல்போன் சிக்னல்களும் வெவ்வேறு இடத்தில் இருப்பதாக காட்டுகின்றன. ஆதாரங்கள் எதிராக இருந்த காரணத்தால் போலீசார் மேற்கொண்டு எதுவும் செய்ய முடியவில்லை. அந்த பெண்ணின் கணவர் வெளிநாடு சென்றிருப்பதாக புதிய தகவல் கிடைத்துள்ளது. அவருக்கு எததிராக அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது. 

இதையும் படிங்க;-  சின்ன பொண்ணுகூட பார்க்காமல் சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி கல்லா கட்டிய கும்பலுக்கு சரியான ஆப்பு..!

click me!