அப்போது ஒரு வாலிபர் ஒருவர் சந்தேகத்துக்கு இடமான முறையில் நடந்து கொண்டார். இதனையடுத்து அவரை சுற்றி வளைத்த போலீஸ் தனியாக அழைத்துச் சென்று சோதனை செய்தனர். அப்போது சர்வதேச போதைப் பொருளான மெத்தபட்டமைன் அவரிடம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவரை பிடித்து தேனி காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.