ஸ்கூலில் வைத்து டிராயரை அவிழ்த்த ஆசிரியர்.. அந்தரங்க உறுப்பில் வலி.. கதறி துடித்த மாணவன்.. நடந்தது என்ன?

Published : Jun 23, 2023, 09:25 AM IST

அரசு மேல்நிலைப் பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

PREV
14
ஸ்கூலில் வைத்து டிராயரை அவிழ்த்த ஆசிரியர்.. அந்தரங்க உறுப்பில் வலி.. கதறி துடித்த மாணவன்.. நடந்தது என்ன?

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்துள்ள கண்ணாட்டுவிளை பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக அருள்ஜீவன் (47) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்த பள்ளியில் ஆலங்கோடு பகுதியை சேர்ந்த 13 வயது மாணவன் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.

24

கடந்த 14-ம் தேதியன்று மாணவன் மதிய உணவு சாப்பிட்டு விட்டு சிறுநீர் கழிப்பதற்காக கழிவறைக்கு சென்று திரும்பியுள்ளார். அப்போது அங்கு வந்த ஆசிரியர் அருள் ஜீவன் மாணவனின் தோளில் கையை போட்டு நைசாக பேசி அறிவியல் ஆய்வகத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அவர் மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால், அவரது உறுப்பில் வலி ஏற்பட்டுள்ளது. 

34
police

இதுதொடர்பாக நடந்த சம்பவம் தொடர்பாக தந்தையிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தார். ஆனால், இந்த புகார் தொடர்பாக ஆசிரியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர் நடவடிக்கை எடுக்காத நிலையில் நேற்று குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

44

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். இதனையடுத்து, 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ததை அறிந்த ஆசிரியர் தலைமறைவானார். 

Read more Photos on
click me!

Recommended Stories