ஈரோடு மாவட்டம் கொல்லம்பாளையம் வ.உ.சி. வீதியை சேர்ந்தவர் மனோகரன். ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். இவரது மனைவி புவனேஸ்வரி (53). அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு குழந்தை இல்லை. தினமும் காலை எழுந்த உடன் மனோகரன் நடைபயிற்சி செல்வது வழக்கம். அதேபோல், கடந்த 20ம் தேதி மனோகரன் நடை பயிற்சிக்காக வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய போது மனைவி புவனேஸ்வரி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடப்பதை பார்த்து கணவர் அதிர்ச்சியடைந்தார்.