இந்நிலையில், மதியம் சுமார் 2 மணியளவில் மந்திரி வணிக வளாகத்தின் பின்புறமுள்ள ரயில்வே மேம்பாலம் அருகே யாமினி வந்து கொண்டிருந்தார். அப்போது இளைஞர் ஒருவர் வழிமறித்தது மட்டுமல்லாமல் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் எதிர்பாராத விதமாக யாமினி கண்ணில் மிளகாய் பொடியை தூவி கத்தியால் கழுத்தில் சரமாரியாக குத்தியுள்ளார். அலறியடி ரத்த வெள்ளத்தில் சரிந்த யாமினி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து அந்த இளைஞர் அங்கிருந்து தப்பித்தார்.