திருச்சியை சேர்ந்த 26 வயது பெண் சென்னை வடபழனியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அங்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இலுப்பூரை சேர்ந்த வாலிபர் ஒருவரும் பணியாற்றினார் என்று கூறப்படுகிறது.
25
ஆரம்பத்தில் நட்பாக பழகிய இருவருக்கும் இடையே பிறகு காதல் ஏற்பட்டது. பின்னர் அந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
35
ஒருகட்டத்தில் அந்த வாலிபர் பெண்ணுடன் உல்லாசமாக இருந்துவிட்டு பின்னர் திருமணம் செய்ய மறுத்து தனது சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். பிறகு ஒருவழியாக காதலனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார் அந்த பெண்.
காதலனால் பாதிக்கப்பட்ட இளம்பெண் தனது தாயாருடன் தனது காதலன் வீட்டிற்கு சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த காதலன் மற்றும் அவரது பெற்றோர் அவர்களை தகாதவார்த்தைகளால் திட்டி விரட்டி அடித்ததாக கூறப்படுகிறது.
55
இந்த சம்பவம் குறித்து இளம்பெண் அளித்த புகாரின் பேரில் கீரனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் லதா, இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிய காதலன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.