இந்த சம்பவம் தொடர்பாக திலீப்பின் பெற்றோர் யோகிதா மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதில் யோகிதா தொடர்ந்து கொடுத்த மிரட்டல் மற்றும் சொத்து கேட்டு செய்த டார்ச்சர் தான் திலீப்பின் இந்த முடிவுக்கு காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், திலீப்பின் செல்போனை கைப்பற்றி அதில் உள்ள வீடியோக்கள் மற்றும் உரையாடல்களை ஆய்வு செய்து வருகின்றனர். ரகசிய காதலி கொடுத்த டார்ச்சர் தாங்க முடியாமல் ஜிம் மாஸ்டர், வீடியோ கால் பேசியபடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.