ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்துள்ள சேராங்கோட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர் மாரியப்பன். இவரது மகள் ஷாலினி (17). இவர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலை வழக்கம் போல பள்ளிக்கு தோழியுடன் சென்றுள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த குப்புசாமி மகன் முனிராஜ் (21) ஒரு தலைபட்சமாக மாணவி ஷாலினியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. எவ்வளவு சொல்லியும் கேட்காமல் காதலை ஏற்க மறுத்துள்ளார்.