ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், கார்த்திகை தீபம் 2 தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ள நிலையில், இன்றைய தினம் என்ன நடக்கிறது என்பது பற்றி பார்ப்போம்.
கார்த்திகை தீபம்' 2 தொடரின் நேற்றைய எபிசோடில், கார்த்திக் சந்திரகலாவை வைத்து காளியம்மாவுக்கு போன் போட வைத்த நிலையில், சாமுண்டீஸ்வரியிடம் இருந்து வீட்டை எழுதி வாங்கிய அந்த நபர் காளியம்மாவின் வீட்டில் தான் மறைத்து வைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்ற உண்மை கார்த்திக்கு தெரிய வருகிறது. இதனால் காளியம்மா முகத்திரையை கிழிக்க கார்த்திக் மாஸ்டர் பிளான் ஒன்றை போடுகிறான். அதாவது மயில்வாகனத்துக்கு சாமியார் வேடம் போட வைக்கிறான். சாமுண்டீஸ்வரியின் நான்கு பெண்களும் அவனுக்கு உதவி பெண்களாக மாறுகின்றனர்.
காளியம்மா வீட்டிற்குள் திடீர் என நுழையும் அவர்கள், அவளை நம்ப வைத்து வீட்டில் பூஜை செய்ய வேண்டும் என்றும், எல்லா ரூமிலும் சென்று பூஜை செய்த தீர்த்தத்தை தெளிக்க வேண்டும் என்று சொல்கின்றனர். தீர்த்தம் தெளிப்பதற்காக எல்லா ரூமையும் திறந்து காட்டும் காளியம்மா, ஒரு ரூமை மட்டும் திறக்காமல் அந்த ரூமில் பூஜை செய்ய வேண்டாம் என்று கூறுகிறாள். அந்த ரூமில் தான் சம்மந்தப்பட்ட நபர்கள் மறைத்து வைக்கப்பட்டு உள்ளனர் என்பது தெரிய வர மயில் வாகனம் கார்த்திக்கு இந்த தகவலை சொல்கிறான்.
மறுபக்கம் சாமுண்டீஸ்வரி லாயரை வர வைத்து சிவனாண்டி சொத்தை எழுதி வாங்கிய விஷயத்தை சோகத்தோடு சொல்கிறார். ஆனால் லாயர் நீங்க எப்படி இப்படி ஏமாந்தீங்க? ஆச்சரியமா இருக்கு என்று சொல்கிறார். மேலும் சிவனாண்டி பயங்கரமாக பிளான் போட்டு உங்க கிட்ட கையெழுத்து வாங்கி இருக்கான், சட்ட ரீதியா இதுல எதுவும் பண்ண முடியாது என்று ஷாக் கொடுக்கிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் தொடரை தொடந்து பாருங்கள்.