நானும் அங்கிருந்து வந்தவன் தான்
அவர்களிடம் கோபமாக பேசிவிட்டு சிறிது தூரம் சென்று அதை காமெடியாக சொல்லி சிரித்த காட்சிகளும் அந்த வீடியோவில் இடம்பெற்றன. இர்பானின் இந்த செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில், தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார் இர்பான். அதில், முன்னேற்பாடுகள் ஏதுமின்றி மனைவியுடன் காரில் சென்று உதவி செய்ததால், அந்த சூழலை தன்னால் கையாள தெரியவில்லை. அதில் திணறியதால் சில விஷயங்களை செய்துவிட்டேன். அது யார் மனதையும் புண்படுத்தி இருந்தால் மன்னித்துவிடுங்கள். கஷ்டப்படுபவர்கள் மீது அக்கறை இல்லை என்று சொல்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லை. நானும் அங்கிருந்து வந்தவன் தான் எனக்கூறி மன்னிப்பு கேட்டுள்ளார் இர்பான்.
இதையும் படியுங்கள்... யூடியூப்பால் கோடீஸ்வரன் ஆன இர்பான்! அவர் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?