பதிலுக்கு சுசி கணேசனும் லீனா மீது அவதூறு வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த விவகாரம் இன்றளவும் நீடித்து வரும் நிலையில் தான் தற்போது புதிய சர்ச்சையில் சிக்கி உள்ளார் லீனா. அவர் இயக்கியுள்ள காளி என்கிற ஆவணப்படத்தின் போஸ்டரின் பெண் ஒருவர் காளியின் வேடமணிந்து சிகரெட் புகைப்பது போலவும், கையில் LGBT சமூகத்தின் கொடியை வைத்திருப்பது போலவும் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. இந்த விவகாரம் தான் தற்போது சோசியல் மீடியாவில் ஹாட் டாப்பிக்காக உள்ளது.
இது தொடர்பாக லீனா மணிமேகலைக்கு எதிர்ப்பு குரல்கள் தொடர்ந்து ஒலித்து வருகின்றன. அவர் மீது டெல்லி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.