குடும்பத்துடன் பீச்சில் குதூகலமாக போஸ் கொடுத்த நடிகை ரம்பா!

First Published Jul 4, 2022, 8:51 PM IST

90'ஸ் நடிகை ரம்பா தற்போது தனது 3 பிள்ளைகள் மற்றும் கணவருடன் பீச்சில் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Actress Ramba

விஜயலட்சுமி என்னும் பெயரில் ஆந்திராவில் பிறந்த ரம்பா. முதலில் தெலுங்கில் அறிமுகமானார். 1993 ஆம் ஆண்டு வெளியான உழவன் படத்தில் ஈஸ்வரியாக தமிழுக்கு அறிமுகமானார். அந்த படத்தில்  சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். பின்னர் 'உள்ளத்தை அள்ளித்தா' வில் நாயகியாக அறிமுகமான இவருக்கு முதல் படமே நல்ல பெயரை பெற்று கொடுத்தது.

Actress Ramba

பின்னர் அர்ஜுனின் செங்கோட்டை படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக ரம்பா நடித்திருந்தார். தமிழில் அடுத்தடுத்து கமிட் ஆகி வந்த ரம்பா வருடத்திற்கு நான்கு முதல் ஐந்து படங்களை கொடுக்கும் ஹிட் நாயகியாக இருந்தார். 1999 ஆம் ஆண்டு 8 படங்களில் நடித்திருந்தார்.

Actress Ramba

2010 க்கு பிறகு தமிழில் பட வாய்ப்புகளை குறைத்துக் கொண்ட இவர்,  இந்திரகுமார் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.

Actress Ramba

தற்போது வெளிநாட்டில் குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டார். சமீபத்தில் அருண் விஜயின் யானை படத்தை சென்னையில் பார்த்த ரம்பாவின் பேட்டி வைரலாகி வருகிறது. இந்நிலையில் ரம்பா தனது குடும்பத்துடன் பீச்சில் மகிழ்ந்துள்ள போட்டோஸ் வைரலாகி வருகிறது.

click me!