முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகள் வளர்ப்பு முகாமில் பராமரிப்பாளர்களாக பணிபுரிந்து வருபவர்கள் பொம்மன் பெள்ளி தம்பதியினர். 2017-ம் ஆண்டு தேன்கணிக்கோட்டை பகுதியில் தாயைப் பிரிந்து சுற்றித்திரிந்த ஆண் குட்டி யானையும், 2018-ம் ஆண்டு தாயைப்பிரிந்து சத்தியமங்கலம் பகுதியில் சுற்றித்திரிந்த மற்றொரு யானையும், முதுமலையில் உள்ள முகாமுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.