BiggBoss 5 Tamil: தப்பா போன ரசிகர்கள் கணிப்பு.. இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது இவரா? செம்ம ஷாக்

First Published Dec 12, 2021, 12:48 PM IST

ஒவ்வொரு வாரமும் பிக்பாஸ் வீட்டை (Biggboss House) விட்டு ஒருவர் வெளியேறியே ஆக வேண்டும் என்பது இந்த விளையாட்டின் விதி. அதன் படி இந்த வாரம் யார் வெளியேறுவார் என்பது குறித்து ரசிகர்கள் கணித்த கணிப்பு தவறாகி, முக்கிய பிரபலம் வெளியேறியுள்ளது ரசிகர்களை உச்சகட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம், ஏற்கனவே எலிமினேட் செய்யப்பட்டு வெளியேறி.. மீண்டும் வயல் கார்டு போட்டியாளராக உள்ளே வந்த, அபிஷேக் ராஜா (Abishek Raja) இரண்டாவது முறையாக எலிமினேட் செய்யப்பட்டு வெளியேறினார்.

இந்நிலையில் இந்த வாரம், பிக்பாஸ் வீட்டில் இருந்து இருவர் வெளியேற வாய்ப்புள்ளதாக சில தகவல்கள் வெளியான நிலையில், இந்த வாரம் மிக குறைவான வாக்குகளுடன் யாரும் எதிர்பாராத போட்டியாளர் ஒருவர் வெளியேறியுள்ளார்.

இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் சிபி (Ciby), தாமரை (Thamarai), நிரூப் (Niroop), அபிநய் (Abinay), அக்ஷரா (Akshara), இமான் அண்ணாச்சி (Imaan Annachi), அமீர் (Ameer) ஆகிய பிரபலங்கள் இடம்பெற்றிருந்தனர்.

இதில் நிரூப் தன்னிடம் உள்ள காயினை வைத்து, சஞ்சீவை நாமினேட் செய்தார். ஆனால் பிக்பாஸ் கொடுத்த டாஸ்கில் அவர் தோற்றதால், அவர் பெயர் நாமினேஷன் லிஸ்டில் இருந்து நீக்கப்படவில்லை.

கடந்த ஒரு வாரம் முழுவதும் பல்வேறு குழப்பங்கள், மற்றும் பிரச்சனைகளுடன் நடந்து வந்த.... அரசியல் மாநாடு’ டாஸ்க் நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில் இமான் அண்ணாச்சியின் அணி வெற்றிபெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது.

மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்த டாஸ்கில்...  மூன்று அரசியல் கட்சிகளாக போட்டியாளர்கள் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு கட்சியிலும் நான்கு உறுப்பினர்கள் விளையாடினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த டாஸ்கில் எந்த கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைத்ததோ அந்த அணியே வெற்றிபெற்ற அணியாக அறிவிக்கப்பட்டது.

இமான் அண்ணாச்சியின் நியாயத்தைப் பேசும் மக்கள் கட்சியும், சிபியின் மக்கள் முன்னேற்ற கழகமும் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது. பிரியங்காவின் உரக்கச் சொல் கட்சி தனித்து போட்டியிட்டது. வாக்குப்பதிவு முடிந்து வாக்கு எண்ணிக்கையில் இமான் அண்ணாச்சி மற்றும் சிபி இணைந்த கூட்டணிக்கு 7 வாக்குகளும் பிரியங்காவின் உரக்கச் சொல் கட்சிக்கு 5 வாக்குகளும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை தொடர்ந்து, நேற்றைய தினம் பிக்பாஸ் போட்டியாளர்கள் முன்பு தோன்றிய கமல்... தாமரை, ராஜு, ப்ரியங்கா, பாவினி என அனைவரையுமே தன்னுடைய கேள்விகளால் மிரட்டினார்.

மேலும் இந்த முறை குறைந்த வாக்குகளுடன், அபிநய் அல்லது நிரூப் ஆகிய இருவரில் ஒருவரோ... அல்லது இரண்டு எலிமினேஷன் இருக்கும் பச்சத்தில் இருவரும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் யாருமே எதிர்பாராத போட்டியாளர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருப்பது தான் செம்ம ட்விஸ்ட். அதாவது இந்த வாரம், மிக குறைந்த வாக்குகளுடன் பிக்பாஸ் பைனல் வரை செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட இமான் அண்ணாச்சி வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி துவங்கியதில் இருந்து... நெட்டிசன்கள் கணித்து கூறிய போட்டியாளர்கள் மட்டுமே ஒவ்வொரு வாரமும் வெளியான நிலையில் இந்த முறை நெட்டிசன்கள் மற்றும் பிக்பாஸ் ரசிகர்களின் கணிப்பு தவறியது அவர்களையே செம்ம ஷாக் ஆக்கியுள்ளது.

click me!