திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன், வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். அவரின் திரைப்பயணம் பற்றியும், ஏவிஎம் என்கிற சாம்ராஜ்ஜியம் உருவானது பற்றியும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தென்னிந்திய திரைப்பட வரலாற்றில் தவிர்க்க முடியாத பெயர் ஏவிஎம். தென்னிந்திய சினிமாவில் பல்வேறு புதுமைகளை நிகழ்த்திய இந்த நிறுவனம், பல்வேறு காலகட்டங்களில் தமிழ் சினிமாவின் முகத்தையே மாற்றி அமைத்தது. ஒவ்வொரு படத்திலும் புதுமைகளையும், புது புது கலைஞர்களையும், புதுமுக நடிகர்களையும் இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியதால் தமிழ் சினிமாவின் வரலாற்றில் ஏவிஎம் ஒரு முகவரியாகவே திகழ்ந்தது.
24
ஏவிஎம் உருவானதன் பின்னணி
ஏவிஎம் என்கிற இந்த சினிமா கோட்டைக்கான முதல் செங்கல் நடப்பட்டது, காரைக்குடியில் உள்ள ஏவி அண்ட் சன்ஸ் என்கிற நிறுவனத்தில் தான். அன்றாட மளிகை பொருட்கள் தொடங்கி அனைத்தும் அங்கு கிடைக்கும். அந்த காலகட்டத்தில் மக்களுக்கு இசைத் தட்டுகள் மீது ஆர்வம் கொண்டதை உணர்ந்த ஏவி மெய்யப்ப செட்டியார். அந்த பிசினஸில் களமிறங்கினார். சென்னையில் சரஸ்வதி ஸ்டோர்ஸ் என்கிற பெயரில் இசைத் தட்டு தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கினார் அது மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
34
முதல் படமே தோல்வி
பின்னர் சினிமா படங்கள் தயாரிக்க ஆர்வம் காட்டிய மெய்யப்ப செட்டியார், சரஸ்வதி சவுண்ட் புரொடக்ஷன்ஸ் என்கிற நிறுவனத்தை 1934-ம் ஆண்டு தொடங்கி அல்லி அர்ஜுனா என்கிற திரைப்படத்தை தயாரித்தார். இன்றைய டெக்னாலஜி அன்றைக்கு இல்லாததால், ஒரு காட்சியை எடுத்துவிட்டால் அதை எடிட்டிங்கின் போது தான் பார்க்க முடியும். அப்படி படம் எடுத்து முடித்து எடிட்டிங்கில் பார்த்தபோது படத்தில் நடித்தவர்கள் சூர்ய ஒளி கண்ணில் பட்டதால் கண்ணை மூடிக்கொண்டே நடித்திருக்கிறார்கள். இந்தக் குறை பெரும் கறையாக மாறி படத்தின் தோல்விக்கு வித்திட்டது.
அதன்பின்னர் ஏவிஎம் நிறுவனம் தொட்டதெல்லாம் வெற்றியாகவே அமைந்தது. எம்ஜிஆர், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களை உச்சத்துக்கு கொண்டு சென்றதில் ஏவிஎம் நிறுவனத்துக்கும் பங்கு உண்டு. மெய்யப்ப செட்டியாருக்கு பின் ஏவிஎம் நிறுவனத்தை கட்டிக் காத்தவர் தான் ஏவிஎம் சரவணன். சம்சாரம் அது மின்சாரம், முந்தானை முடிச்சு போன்ற தமிழ் சினிமாவின் மாஸ்டர் பீஸ் படங்களை தயாரித்தது சரவணன் தான்.
ரஜினிகாந்துக்கு முரட்டுக்காளை தொடங்கி சிவாஜி தி பாஸ் வரை ஏவிஎம் நிறுவனம் தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்திருக்கிறது. இதன் காரணமாக அந்நிறுவனத்திற்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு படம் பண்ண வேண்டும் என்கிற முடிவில் இருந்தார் ரஜினி. அந்த அளவுக்கு ஏவிஎம் நிறுவனம் மீது ரஜினிக்கு மதிப்பும் மரியாதையும் இருந்தது. நடிகர் சூர்யாவின் பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படமான அயன், ஏவிஎம் தயாரிப்பில் உருவானது தான்.
இப்படி கோலிவுட்டின் முதுகெலும்பாக இருந்த வந்திருக்கிறது ஏவிஎம் நிறூவனம். அதன் உரிமையாளராக இருந்த ஏவிஎம் சரவணன், வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 86. ஏவிஎம் சரவணனின் மறைவு தமிழ் திரையுலகிற்கு பேரிழப்பாக உள்ளது. அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.