நீலோத்தி என்றால் என்ன? சிறை பட பாடலின் பிரம்மிக்க வைக்கும் பின்னணி தெரியுமா?

Published : Feb 07, 2026, 03:20 PM IST

விக்ரம் பிரபு, அக்‌ஷய் குமார் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்ற சிறை படத்தில் இடம்பெற்ற நீலோத்தி என்கிற பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன் வரிகள் உருவான விதத்தை பார்க்கலாம்.

PREV
14
Secret Behind Neelothi Song

சிறை படம் ரசிகர்களை எந்த அளவுக்கு கவர்ந்ததோ, அதில் இடம்பெற்ற நீலோத்தி என்கிற பாடலும் பலரின் மனதில் நீங்கா இடம்பிடித்து உள்ளது. நீலோத்தி என்பதே பலரும் கேள்விப்படாத ஒரு வார்த்தையாக இருக்கிறது. இந்த உலகில் பெருவாரியான நிலப்பரப்பை கடல் தான் ஆக்கிரமித்து உள்ளது. இதனால் நீலம் தான் உலகில் அதிகம் இருக்கிறது என்பதை குறிப்பிடும் வகையில் கவிஞர் சாரதி, நீலோத்தி என்கிற வார்த்தையை அதனை குற்றிப்பிடும் விதமாக புதிதாக அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

24
நீலோத்திக்கு அர்த்தம் என்ன?

கவிஞரின் கற்பனைப் படி, எனக்கு மன நிம்மதி கொடுக்ககூடிய, எனக்கு ரொம்பவும் பிடிச்ச, என்னோட உலகத்துல பாதிக்கும் மேல இருக்குற நீ தான் என நாயகன், நாயகியை பார்த்து குறிப்பிடும் விதமாக தான் இந்த நீலோத்தி என்கிற வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறார் சாரதி. இந்தப் பாடலின் அடுத்த வரியிலேயே ‘மூஸாவ தேடி ஈசன் கிட்ட தூவாவம் செஞ்சி வணங்குவேன்’ என எழுதி இருப்பார். மூஸா என்பது இஸ்லாமிய இறைத் தூதரைக் குறிக்கும். என்னோட சாமியை தேடி ஈசன் கிட்ட துவாவம் செஞ்சி வணங்குனேன் என இஸ்லாம், இந்து என இரு மதத்தையும் ஒருங்கிணைத்து எழுதி இருக்கிறார்.

34
நீலோத்தி பாடல் ரகசியம்

சிறை படத்தின் நாயகன் ஒரு இஸ்லாமியர், நாயகி ஒரு இந்து. அவர்களின் காதலை இதைவிட ஒரு அழகிய வரிகளில் சொல்லியிருக்க முடியாது. அதற்கு அடுத்த வரியில், ‘இருட்டறையில தான் இருந்தவன் வெளிச்சத்த காட்டிய முமினுமே நீ’ என எழுதி இருப்பார். முமின் என்றால் அரபிக் மொழியில், நம்பிக்கை உடையவர் எனப் பொருள். சிறையில் இருட்டறையில் இருந்த எனக்கு வெளிச்சமாக ஒரு நம்பிக்கையாக இருந்தவ நீ தான் என்பதை இந்த வரிகளில் அழகாக சொல்லி இருக்கிறார்.

44
சிறை பட பாடல் உருவான விதம்

இதன்பின்னர் நாயகி, நாயகனை பார்த்து பாடும்படி ஒரு வரி இருக்கும். ‘நேந்துக்கிட்ட சாமிகிட்ட எஞ்சாமிய பாத்துக்க’ என்கிற வரிகளில் நாயகி, நாயகனை தான் கடவுள் போல் பார்ப்பதாவவும், அந்த கடவுளை பத்திரமாக பார்த்துக்கொள்ளுமாரு சாமிகிட்ட வேண்டிக்கிட்டதாக சொல்லி இருக்கிறார். அடுத்த வரியிலேயே ‘படச்சசாமி கேட்காததையும் படிச்ச சாமி கேக்குதே’ என எழுதி இருப்பார். தன்னோட குறைகளை படைச்ச சாமி கூட கேட்கவில்லை. ஆனால் படிச்ச சாமி கேட்டுச்சு என போலீஸ் அதிகாரியாக இருக்கும் விக்ரம் பிரபுவை குறிப்பிட்டு மிக அழகாக எழுதி இருந்தார் சாரதி.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories