இது குறித்து அந்த அதிகாரி கூறுகையில்... "நடிகர் சித்தார்த் மற்றும் அவருடைய குடும்பத்தினர், மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் சோதனை கூடத்திற்கு மாலை 4:15 மணி போல் வந்ததாகவும், அவர்களிடம் முக கவசத்தை விளக்கிக் கொள்ள அறிவுறுத்தப்பட்டதாகவும், பின்னர் அவர்களின் அடையாள அட்டை, அவருடைய குடும்பத்தினரின் உடமைகள், சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார். இது அனைத்து பயணிகளுக்குமே உண்டான வழக்கமான நடைமுறைதான். குறிப்பாக நடிகர் சித்தார்த்தை சோதித்தது பாதுகாப்பு படையை சேர்ந்த பெண் வீரர்தான் என்றும் அவர் தஞ்சாவூர் மாவட்டத்தை செய்த தமிழ் பெண்தான் என கூறியுள்ளார்.