“என் பொண்ணு சாவுக்கு காரணமானவங்கள கண்டுபிடிங்க”... சித்ராவின் தந்தை போலீசில் புகார்...!

First Published Dec 9, 2020, 2:40 PM IST

அதில், சித்ராவின் மரணத்திற்கு யார் காரணம் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். 

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த விஜே சித்ரா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
undefined
அதுமட்டுமின்றி தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் நடத்தி வரும் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
undefined
முதற்கட்டமாக விஜே சித்ராவிற்கும், தொழிலதிபதிர் ஹேமந்த் ரவிக்கும்கடந்த அக்டோபர் மாதமே பதிவு திருமணம் நடந்து விட்டது தெரியவந்துள்ளது.
undefined
நேற்று விஜய் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற விஜே சித்ரா, அதை முடிக்க இரவு நெடுநேரம் ஆனதால் ஹேமந்த்உடன் நசரத்பேட்டையில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கியுள்ளார்.
undefined
அங்கு அதிகாலை குளிப்பதாக கூறிவிட்டு, ஹேமந்த் ரவியைவெளியே அனுப்பிய சித்ரா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
undefined
ஏற்கனவே தனது மகள் மிகவும் மன வலிமை கொண்டவள், அவள் நிச்சயம் தற்கொலை செய்து கொள்ளமாட்டார் என சித்ராவின் தாயார் ஊடகங்களுக்கு கண்ணீர் மல்க பேட்டியளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
undefined
இந்நிலையில், நடிகை சித்ராவின் தந்தை மற்றும் உறவினர்கள் நசரத் பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளனர். அதில், சித்ராவின் மரணத்திற்கு யார் காரணம் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
undefined
இதைத்தொடர்ந்து மாற்று சாவியை பயன்படுத்தி ஓட்டல் அறையை திறந்த கணேசன் என்ற ஊழியரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தகட்டமாக ஓட்டலின் சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்ய வருகின்றனர்.
undefined
click me!