“அது முடிஞ்சாச்சு... மறுபடியும் கிளப்பாதீங்க”.... செய்தியாளர்களின் கேள்விக்கு விஜய் சேதுபதி அதிரடி பதில்...!

First Published Jan 26, 2021, 12:46 PM IST

விஜய் சேதுபதி 800 படம் குறித்த கேள்விக்கு காரசாரமாக பதிலளித்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முதன் முறையாக இணைந்து நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம். பொங்கல் விருந்தாக கடந்த 13ம் தேதி வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டாகியுள்ளது. இதில் விஜய் சேதுபதியின் பவானி கதாபாத்திரம் முக்கிய பங்காற்றியுள்ளதாக பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர்.
undefined
இந்நிலையில் விஜய் சேதுபதி செங்கல்பட்டு மாவட்டம் நாவலூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கார் சர்வீஸ் சென்டர் ஒன்றை திறந்து வைத்தார்.
undefined
விஜய் சேதுபதியின் வருகையை அறிந்த ரசிகர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
undefined
கார் சர்வீஸ் சென்டரை திறந்து வைத்த விஜய்சேதுபதி வெளியே சென்று காரில் ஏறமுடியாமல் மக்கள் வெள்ளத்துக்கு இடையே மிதந்தார். அவருடன் முட்டி மோதிக் கொண்டு பலர் செல்ஃபி எடுத்தனர்.
undefined
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த விஜய் சேதுபதி 800 படம் குறித்த கேள்விக்கு காரசாரமாக பதிலளித்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
undefined
800 படம் பற்றிய கேள்விக்கு, “அந்த பிரச்சனை ஏற்கனவே முடிச்சிடுச்சி. அதை மறுபடியும் கிளப்பாதீங்க என கூறுகிறார். மீண்டும் அதையே செய்தியாளர் கேட்க “அது முடிச்சிடுச்சி டா, வேற” என பதிலளிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
undefined
அதேபோல் மாஸ்டர் படம் விஜய் சேதுபதியால் தான் சிறப்பாக உள்ளதாக கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு, “இந்த கேள்வியே அவசியமில்லாதது. விஜய்யால் மட்டும் தான் அந்த படத்துக்கு இவ்வளவு சிறப்பு” என்று பதிலளித்துள்ளார்.
undefined
click me!