இரண்டாவது கணவருக்கு அவசர திருமணம்... சீரியல் நடிகை போலீசில் பரபரப்பு புகார்...!

First Published Aug 3, 2020, 2:05 PM IST

சினிமா நடிகர்கள் வாழ்க்கையில் மட்டும் நடைபெற்று வந்த விவாகரத்து பஞ்சாயத்து, தற்போது சீரியல் நடிகர், நடிகைகள் வாழ்க்கையில் உச்சத்தை எட்டி வருகிறது. மேலும் இந்த கொரோனா லாக்டவுன் சமீபத்தில் கணவன் - மனைவி இடையிலான பிரச்சனைகளும் அதிகரித்து வருகின்றன. அப்படி குடும்ப பிரச்சனை காரணமாக கணவனை பிரிந்திருந்த நிலையில், அவருக்கு இரண்டாவது திருமணம் செய்ய திட்டமிடுவதாக பிரபல சீரியல் நடிகை போலீசில் புகார் அளித்துள்ளார். 
 

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான ஈரமான ரோஜாவே சீரியலில் ஷீலா. ஈரமான ரோஜாவே சீரியலில் பவித்ரா மற்றும் காயத்ரியின் 3வது தங்கையான தேனு என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
undefined
சீரியலில் மட்டுமல்லாது கண்ணே கலைமானே, அடுத்த சாட்டை, நாடோடிகள் 2 என சினிமா படங்களில் நடித்து வருகிறார்.
undefined
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஷீலா திருமணத்திற்கு பிறகு மும்பையில் இரண்டு குழந்தைகள் மற்றும் கணவருடன் செட்டிலானார்.
undefined
அதன்பின்னர் மனக்கசப்பு காரணமாக விவகாரத்து பெற்ற ஷீலா, 5 வருடங்களுக்கு முன்பு எடப்பாடியைச் சேர்ந்த செளந்தர் ராஜன் என்பவரை சோசியல் மீடியாவில் ஏற்பட பழக்கம் மூலமாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
undefined
சமீபத்தில் திருமணமான இவர்களுக்குள் ஏதோ பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதனால் இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
undefined
இதனிடையே செளந்தர் ராஜனுக்கு அவருடைய குடும்பத்தினர் இரண்டாவது திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.
undefined
இதைக் கேள்விப்பட்ட ஷீலா தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது எடப்பாடி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஷீலாவின் புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
undefined
click me!