ஜனநாயகன் ரிலீசுக்கு பிரச்சனை வரும்னு தெரியும்... என்ன விஜய் இப்படி சொல்லிட்டாரு..!

Published : Jan 31, 2026, 02:09 PM IST

ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள நடிகர் விஜய், முதன்முறையாக தன்னுடைய கடைசி படமான ஜனநாயகன் எதிர்கொண்டு வரும் பிரச்சனைகள் குறித்து பேசி இருக்கிறார்.

PREV
15
Vijay Speaks About Jana Nayagan

தமிழ் திரையுலகில் நடிகர் விஜயை மையமாக வைத்து வெளிவரும் ஒவ்வொரு செய்தியும் இன்று ஒரு சாதாரண தகவலாக இல்லாமல், பெரும் சமூக மற்றும் அரசியல் விவாதமாக மாறி வருகிறது. அந்த வரிசையில் தற்போது அதிக கவனம் பெற்றிருப்பது விஜய் நடித்துள்ள “ஜனநாயகன்” திரைப்படம் தொடர்பான சர்ச்சைதான். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இந்த படம், எதிர்பாராத விதமாக சென்சார் சான்றிதழ் சிக்கலில் சிக்கி, வெளியீடு தள்ளிப் போகும் நிலைக்கு வந்துள்ளது.

25
சிக்கலில் ஜனநாயகன்

ஆரம்பத்திலிருந்தே அரசியல் பின்னணியுடன் கூடிய கதையைக் கொண்ட படமாக “ஜனநாயகன்” பேசப்பட்டு வந்தது. குறிப்பாக நடிகர் விஜய் அரசியலில் நேரடியாக ஈடுபடப் போவதாக அறிவித்த பிறகு, இந்த படம் மீதான பார்வை முற்றிலும் வேறு திசைக்கு திரும்பியது. படத்தின் தலைப்பே அரசியல் உணர்வுகளைத் தூண்டும் வகையில் இருப்பதால், வெளியீட்டுக்கு முன்பே பல தரப்பினரிடையே கேள்விகளும் விமர்சனங்களும் எழுந்தன. இந்த நிலையில், படத்திற்கு சான்றிதழ் வழங்கும் போது சென்சார் போர்டு சில முக்கிய ஆட்சேபனைகளை முன்வைத்ததாக கூறப்படுகிறது.

35
ஜனநாயகன் வழக்கு

குறிப்பாக சில வசனங்கள் மற்றும் காட்சிகள் அரசியல் ரீதியாக சர்ச்சையை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அவற்றில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனை ஏற்க மறுத்த தயாரிப்பு தரப்பு, சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியது. ஆனால், நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் படக்குழுவுக்கு உடனடி தீர்வு கிடைக்கவில்லை. இதன் விளைவாக, பொங்கல் வெளியீடு என்ற பெரிய திட்டம் கைவிடப்பட்டது.

45
சென்சார் போர்டு முட்டுக்கட்டை

ஏற்கனவே விளம்பரங்கள், திரையரங்கு முன்பதிவுகள், புரமோஷன் நிகழ்ச்சிகள் என பல ஏற்பாடுகள் முடிந்திருந்த நிலையில், இந்த திடீர் சிக்கல் தயாரிப்பாளருக்கு கடும் பொருளாதார அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அடுத்த கட்டமாக உச்ச நீதிமன்றத்தை அணுக தயாரிப்பாளர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை முன்கூட்டியே கணித்த சென்சார் போர்டு, உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்த விவகாரம் இன்னும் தீவிரமடையப்போகிறது என்பது தெளிவாகிறது.

55
விஜய்யின் ரிப்ளை என்ன?

இந்த சர்ச்சை குறித்து இதுவரை மௌனம் காத்து வந்த நடிகர் விஜய், சமீபத்தில் முதன்முறையாக ஒரு ஆங்கில செய்தி சேனலுக்கு பேட்டி அளித்து தனது மனநிலையை வெளிப்படுத்தியுள்ளார். அந்த பேட்டியில் அவர், “இந்த பிரச்சனையில் என்னை விட தயாரிப்பாளரை நினைத்தால்தான் எனக்கு அதிக கவலை. ஒரு படத்துக்காக அவர் போட்ட முதலீடும், உழைப்பும் இப்போது கேள்விக்குறியாகியுள்ளது,” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “நான் அரசியலில் நுழையப் போவதாக அறிவித்த நாளிலிருந்தே இப்படிப்பட்ட தடைகள் வரும் என எதிர்பார்த்தேன். என்னை குறிவைத்து விஷயங்கள் நடக்கலாம் என்பதில் எனக்கு ஆச்சரியம் இல்லை. அதற்கெல்லாம் மனதளவில் நான் தயாராகவே இருந்தேன்,” என்றும் விஜய் கூறியுள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories