புத்தாண்டுக்கு ஜோடியா இருந்தாங்க... பொங்கலுக்கு பிரிஞ்சிட்டாங்க!! இதுக்காக தான் நயனை பிரிந்து சென்றாரா விக்கி?

First Published Jan 14, 2022, 6:06 PM IST

புத்தாண்டை காதலியுடன் ஜோடியாக கொண்டாடிய விக்னேஷ் சிவன், தற்போது பொங்கல் பண்டிகையை நயன்தாரா, இன்றி தனியாக கொண்டாடி உள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் கடந்த 2015-ம் ஆண்டு நானும் ரவுடி தான் படத்தில் நடித்தபோது அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது காதல்வயப்பட்டார். இந்த காதல் ஆறு ஆண்டுகளுக்கு மேலாக தற்போது வரை நீடித்து வருகிறது.

விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது. இவர்கள் இருவரும் தற்போது ஒரே வீட்டில் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருகிறார்கள். 2022-ம் ஆண்டு இவர்களது திருமணம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகை நயன்தாரா, காதலனுடன் வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்திருப்பவர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தல் இருந்ததால், வெளிநாட்டு பயணங்களை தவிர்த்து வந்தார். அண்மையில் புத்தாண்டு கொண்டாட இருவரும் ஜோடியாக துபாய் சென்றிருந்தனர்.

புத்தாண்டை காதலியுடன் ஜோடியாக கொண்டாடிய விக்னேஷ் சிவன், தற்போது பொங்கல் பண்டிகையை நயன்தாரா, இன்றி தனியாக கொண்டாடி உள்ளார். அவர் நயன்தாராவை பிரிந்து பொங்கல் கொண்டாடுவது ஏனெனில், தற்போது விக்னேஷ் சிவன் சபரிமலைக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். 

அங்கு அவர் தனது நண்பர்களுடன் இருமுடி கட்டி சென்றுள்ளார். இன்று நடைபெறும் மகரஜோதி பூஜை முடிந்த பின்னரே அவர் சென்னை திரும்புவார் என கூறப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயில் முன்பு வேட்டி சட்டை அணிந்தபடி விக்னேஷ் சிவன் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

click me!