3 நாட்கள் ஆனாலும், அந்த காத்திருப்புக்கு இந்த இறுதிப்போட்டி ஒர்த் ஆக அமைந்திருந்தது என்று தான் சொல்ல வேண்டும். திரில் வெற்றிக்கு பெயர்போன சிஎஸ்கே அணி, இம்முறையும் இறுதிப்பந்தில் பவுண்டரி அடித்து வெற்றி வாகை சூடியது. கடைசி 2 பந்தில் 10 ரன்கள் எடுக்க வேண்டும் என்கிற இக்கட்டான சூழ்நிலையில் இருந்த சென்னை அணிக்கு, சூப்பர் ஹீரோ போல் வந்து சிக்சர் மற்றும் பவுண்டரி விளாசி வெற்றிக்கு வித்திட்டார் ஜடேஜா.