விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம், மக்களிடையே பாசிட்டிவ் விமர்சனத்தை பெற்று தந்துள்ளது. நானும் ரௌடிதான் படத்திற்கு பிறகு இந்த கூட்டம் மீண்டும் இணைந்துள்ளது. தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவனின் அடுத்த படைப்பாக இந்த படம் வெளியாகியிருக்கிறது.
23
kaathuvaakula rendu kaadhal
அனிருத்தின் 25 வது படமான காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவுடன் இணைந்து, விக்னேஷ் சிவன், நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகியுள்ளது. முக்கோண காதல் கதையை கொண்ட \இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பியது. இப்படம் வெளியான 4 நாட்களிலேயே 34 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
33
kaathuvaakula rendu kaadhal
படத்தின் வெற்றியால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் விக்னேஷ் சிவன் தற்போது விலையுயர்ந்த ஃபெராரி கார் ஒன்றை வாங்கி உள்ளார். இந்த படைத்தோன் மூலம் பல கோடி ரூபாய் லாபத்தை ரவுடி பிக்சர்ஸ் பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திற்காக இயக்குனர் விக்னேஷ் சிவன் ரூ. 2 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.