இவர்களது திருமணத்தை படமாக்கும் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கி இருந்ததால், விருந்தினர்கள் திருமணம் நடைபெறும் இடத்தில் போட்டோ எடுக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் அவர்களது திருமண புகைப்படங்கள் எப்போது வெளியாகும் என ஆவலோடு காத்திருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக நேற்று மதியம் 3 மணியளவில் வரிசையாக தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டார் விக்னேஷ் சிவன்.