இந்நிலையில், தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் சமீபத்திய பேட்டியில் நடிகர் அஜித் தன்னை ஏமாற்றிவிட்டதாக சரமாரியாக சாடி உள்ளார். அதில் அவர் கூறியதாவது : “அஜித் மாபெரும் நடிகர், அதனால் தான் அவர் நிஜ வாழ்க்கையிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அவர் முதலில் மனுஷனாக வாழ வேண்டும். அவர் என்னிடம் பணம் வாங்கிவிட்டு திருப்பி தராமல் ஏமாற்றிவிட்டார். அந்த சமயத்தில் என்னிடம் ஆதாரம் இல்லாததால் ஏமாற்றிவிட்டார்.