அவர் பேசியதாவது : “பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் ஜாதிச் சான்றிதழ் கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும். எனது பிள்ளைகளுக்கு ‘No caste' சான்றிதழ் பெற நான் முயற்சித்தேன். ஆனால் தர முடியாது என அதிகாரிகள் கூறிவிட்டனர். இதுதொடர்பாக நீதிமன்றத்தை நாடியபோதும், அவர்கள் நீங்கள் ஏதேனும் ஒரு ஜாதியை குறிப்பிட வேண்டும் என தெரிவித்தனர்.
ஜாதிச் சான்றிதழ் தேவையில்லை என விருப்பப்படுவோருக்கு ‘No caste' சான்றிதழ் வழங்க அனுமதிக்க வேண்டும். ஆனால் அதே சமயத்தில் சமூக நீதி அடிப்படையில் உரிமையை பெறுவதற்கு ஒருவர் ஜாதிச் சான்றிதழை பயன்படுத்துவது அவசியம்.