தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் என தொடர்ந்து வெற்றிப்படங்களை இயக்கிய அவர், தற்போது விடுதலை என்கிற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். சூரி மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள இப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தின் பின்னணி பணிகள் தற்போது முழுவீச்சில் நடைப்பெற்று வருகிறது.
இந்நிலையில், மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்வில் தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சியில் இயக்குனர் வெற்றிமாறன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் ஜாதிச் சான்றிதழ் கேட்பதை நிறுத்த வேண்டும் எனவும் விருப்பப்படுவோருக்கு ‘No caste' சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் இயக்குனர் வெற்றிமாறன் பேசியது சமூக வலைதளங்களில் பேசு பொருள் ஆகி உள்ளது.
இதையும் படியுங்கள்... ஒரு பக்கம் உறவினர்... மறுபக்கம் நண்பர் - ஒரே நாளில் இரு மரணங்கள்... கலங்கிப்போன முதல்வர் மு.க.ஸ்டாலின்
அவர் பேசியதாவது : “பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் ஜாதிச் சான்றிதழ் கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும். எனது பிள்ளைகளுக்கு ‘No caste' சான்றிதழ் பெற நான் முயற்சித்தேன். ஆனால் தர முடியாது என அதிகாரிகள் கூறிவிட்டனர். இதுதொடர்பாக நீதிமன்றத்தை நாடியபோதும், அவர்கள் நீங்கள் ஏதேனும் ஒரு ஜாதியை குறிப்பிட வேண்டும் என தெரிவித்தனர்.
ஜாதிச் சான்றிதழ் தேவையில்லை என விருப்பப்படுவோருக்கு ‘No caste' சான்றிதழ் வழங்க அனுமதிக்க வேண்டும். ஆனால் அதே சமயத்தில் சமூக நீதி அடிப்படையில் உரிமையை பெறுவதற்கு ஒருவர் ஜாதிச் சான்றிதழை பயன்படுத்துவது அவசியம்.