ஒரு பாட்டு பாட 20 டேக்; சுசீலாவையே அசைத்து பார்த்த பாடல் - ஆனா அந்த சம்பவத்திற்கு காரணம் யார் தெரியுமா?

Ansgar R |  
Published : Oct 24, 2024, 08:09 PM IST

Singer Susheela : தமிழ் திரையுலகை மட்டுமல்ல, இந்திய திரை உலகை பொறுத்தவரையில் மிகச்சிறந்த பாடகியாக இன்றளவும் திகழ்ந்து வருபவர் தான் மூத்த திரையிசை பாடகி சுசீலா.

PREV
14
ஒரு பாட்டு பாட 20 டேக்; சுசீலாவையே அசைத்து பார்த்த பாடல் - ஆனா அந்த சம்பவத்திற்கு காரணம் யார் தெரியுமா?
P Susheela

ஆந்திராவில் கடந்த 1935ம் ஆண்டு பிறந்து, தனது 17 வது வயது முதல் கலை உலகில் களமிறங்கியவர் தான் சுசீலா. இந்திய அளவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் 25,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய மாமேதை அவர். இதில் தமிழ் மொழியில் மட்டும் சுமார் 6000 பாடல்களை அவர் பாடியிருக்கிறார். கடந்த 1953ம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளியான "பெற்றதாய்" என்ற திரைப்படத்தின் மூலம் தான் இவர் பாடகியாக அறிமுகமானார். தமிழ் மொழியை பொறுத்தவரை, கடந்த 1956ம் ஆண்டு எம்.எஸ் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் வெளியான சிவாஜி கணேசனின் "தெனாலிராமன்" என்ற படம் தான் இவர் தமிழில் முதல் முதல் பாடிய திரைப்படம்.

குழந்தையோடு தான் ஷாரிக்கை திருமணம் செய்தேன்! கண்ணீரோடு ரியாஸ் கான் மருமகள் கூறிய பகீர் தகவல்!

24
Singer Susheela

சுசிலாவின் குறளுக்கு எப்போதுமே ஒரு தனி மவுசு உண்டு என்றால் அது மிகையல்ல. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டையும் தாண்டி அவருடைய இசை பயணம் தொடர்ந்து வருகிறது என்றால், இசைமேல் அவர் கொண்ட பேரன்பு தான் காரணம் என்றே கூறலாம். தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் இந்திய மொழிகள் பலவற்றுள் சிறந்த பால பாடல்களை பாடிய சுசிலாவிற்கு டப் கொடுக்கும் வண்ணம் ஒரு பாடல் அமைந்திருக்கிறது. அந்த ஒரு பாடலை பாட மட்டும் சுமார் 20 டெக் எடுத்துக் கொண்டாராம் சுசீலா. அந்த அதிசய நிகழ்வு குறித்து இந்த பதிவில் காணலாம்.

34
veteran Singer Susheela

ஆனால், அப்படி 20 டேக் எடுத்துக்கொள்ள காரணம் அல்ல வேறு ஒரு வித்தியாசமான காரணத்தால் தான் சுமார் 20 டேக்குகள் அந்த பாட்டிற்காக எடுக்கப்பட்டுள்ளதாக அண்மையில் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. 1957ம் ஆண்டு, அதாவது பி சுசிலா மெல்ல மெல்ல பாடகியாக உருவெடுத்து வந்த வருடம் அது. அப்போது இயக்குனர் பி.ஆர் பந்தலு இயக்கத்தில், நீலகண்டனின் எழுத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான படம் தான் "தங்கமலை ரகசியம்". அப்பொழுதே பெரிய அளவில் ப்ரோமோஷன் செய்யப்பட்டு, மெகா ஹிட் ஆன திரைப்படங்களில் இதுவும் ஒன்று. இந்த திரைப்படத்தில் மொத்தம் 15 பாடல்கள், இதில் பி சுசீலா பாடிய பாடல் தான் "அமுதை பொழியும் நிலவே" என்கின்ற பாடல். சுசிலாவின் கலை வரலாற்றில் அவருக்கு மிகப்பெரிய பிரேக்கிங் பாய்ண்டாக அமைந்த பாடல் இதுதான்.

44
Thangamalai Ragasiyam

இசையமைப்பாளர் லிங்கப்பா தலைமையில் இந்தப் பாடல் பதிவின் போது, முதல் டேக்கிலேயே அற்புதமாக அந்த பாடலை பாடி அசத்தியிருக்கிறார் சுசீலா. இந்த பாடலை நாயகி பாட, அருகில் மறைந்திருந்து சிவாஜிகணேசன் கேட்பது போல ஒரு காட்சி அமைப்பு. அதுவும் சிவாஜி ஒரு காட்டுவாசி வேடத்தில் இருப்பார். சரியாக அந்த பாடல் முடியும்போது, அவர் மறைந்திருந்து பாட்டை கேட்பதை பார்த்த ஒரு பெண் அலறுவார். அந்த அலறல் குரலை கொடுத்த டப்பிங் கலைஞர் சரியாக கத்தாதால் கிட்டத்தட்டட் 20 டேக் மீண்டும் மீண்டும் பாட்டை பாடினாராம் சுசிலா.

லோகேஷ், ரஜினிக்கு சொன்ன 2வது கதை தான் கூலி; முதல் கதை ட்ராப்பாக காரணம்? பிரபலம் தந்த தகவல்!
 

Read more Photos on
click me!

Recommended Stories