லோகேஷ், ரஜினிக்கு சொன்ன 2வது கதை தான் கூலி; முதல் கதை ட்ராப்பாக காரணம்? பிரபலம் தந்த தகவல்!
Ansgar R |
Published : Oct 24, 2024, 05:45 PM IST
Lokesh and Rajinikanth : இப்போது லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் கூலி திரைப்படத்தின் கதை, ரஜினிகாந்த்துக்கு முதல் முதல் சொல்லப்பட்ட கதை அல்ல என்கின்ற தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2023ம் ஆண்டு பிரபல இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான "ஜெயிலர்" என்கின்ற திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். உலக அளவில் சுமார் 640 கோடி ரூபாய் வரை வசூல் செய்து கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் அதிக வசூல் பெற்ற திரைப்படமாக திகழ்ந்து வருகிறது ஜெயிலர். இந்நிலையால் இந்த ஆண்டு ஞானவேல் இயக்கத்தில் வெளியான "வேட்டையன்" திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும், வசூல் ரீதியாக பெரிய அளவில் ஹிட்டாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தன்னுடைய அடுத்த திரைப்பட பணிகளை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடங்கி இருக்கிறார்.
ஏற்கனவே உலக நாயகன் கமல்ஹாசன், தளபதி விஜய் மற்றும் கார்த்தி ஆகியோர்களை வைத்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்தவர் தான் லோகேஷ் கனகராஜ். இன்றைய தேதியில் தமிழ் சினிமாவின்
"மோஸ்ட் வான்டெட்" இயக்குனர் இவர் தான் என்றால் அது கொஞ்சம் கூட மிகையல்ல. அதிலும் குறிப்பாக தன்னுடைய "லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ்" என்கின்ற விஷயத்தை வைத்து ரசிகர்களை மிகப்பெரிய அளவில் இவர் கவர்ந்து வருகிறார். கைதி திரைப்படத்தில் தொடங்கிய இந்த சினிமாடிக் யுனிவர்ஸ், இறுதியாக லியோ திரைப்படம் வரை தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.
விரைவில் கைதி 2 திரைப்படமும் மிகப்பெரிய சினிமாடிக் யூனிவெர்ஸ் படமாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து "கூலி" என்கின்ற திரைப்படத்தை அவர் இயக்கி வருகிறார். கன்னடம், தெலுங்கு, மலையாளம் என்று பல திரை உலகை சேர்ந்த முக்கிய நடிகர்கள் இந்த திரைப்படத்தில் நடித்து வருகின்றனர்.
34
Lokesh with Rajini
இந்த விஷயம் ஒருபுறம் இருக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்,கு லோகேஷ் கனகராஜ் முதலில் சொல்லிய கதையை அவர் இப்போது எடுக்கவில்லை என்றும். மாறாக "கூலி" திரைப்படத்தின் கதை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு, லோகேஷ் கனகராஜ் இரண்டாவதாக சொன்ன கதை என்கின்ற விஷயமும் தெரிய வந்திருக்கிறது. இது குறித்து பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் சித்ரா லட்சுமிமனனிடம் மனம் திறந்து பேசிய ஒளிப்பதிவாளர் மனோஜ் பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதாவது, ஏற்கனவே ரஜினிகாந்துக்கு சில மாதங்களுக்கு முன்பு, லோகேஷ் சொன்ன கதையை அவர் இப்பொழுது எடுக்கவில்லை. மாறாக வேறு ஒரு கதையை தான் ரஜினியிடம் சொல்லி, அதற்கு அவரும் ஓகே சொல்ல, அந்த கதையைத் தான் இப்பொழுது லோகேஷ் எடுத்து வருவதாக கூறியிருக்கிறார்.
44
DOP Manoj
இதற்கான காரணம் என்ன என்று கேட்ட பொழுது இதற்கு முன்னதாக ரஜினியிடம், லோகேஷ் சொன்ன கதை ஒரு பான் இந்தியன் கதை. அதுமட்டுமல்லாமல் முழுக்க முழுக்க ஐமேக்ஸ் கேமரா கொண்டு அந்த திரைப்படத்தை எடுக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். ஆனால் மேலை நாடுகளில் கூட இன்னும் அந்த விஷயங்கள் பெரிய அளவில் சாத்தியமாகவில்லை. ஆனால் லோகேஷ் கனகராஜ் அதற்கான அனைத்து திட்டங்களையும் தயாராக வைத்திருந்தது உண்மையிலேயே என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது.
அதுமட்டுமல்லாமல் அது இந்திய அளவில் உள்ள நடிகர்கள் பலரை ஒன்றிணைத்து எடுக்கப்பட வேண்டிய கதை. ஆனால் நேரமின்மை காரணமாக, ஆறு மாதங்களுக்குள் கூலி படத்தை முடிக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்ததாலேயே அந்த கதையை விட்டுவிட்டு தற்பொழுது புதிய கதையை ரஜினிக்கு சொல்லி அதை இப்போது அவர் எடுத்து வருவதாக கூறியிருக்கிறார். ஆனால் அவர் யோசித்து வைத்திருக்கும் அந்த பெரிய கதை நிச்சயம் அவர் விரைவில் எடுப்பார். ஆனால் அதற்கு அதிக காலம் மட்டும் பொருட்செலவு தேவைப்படும் என்றும் மனோஜ் கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.