தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் 25,000 மேற்பட்ட பாடல்களை பாடிய அசத்தியவர் தான் பாடகி பி சுசீலா. கடந்த 1953 ஆம் ஆண்டு எம்.எஸ் விஸ்வநாதன் மற்றும் சுப்புராமன் இசையில் வெளியான "சண்டிராணி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான் இவர் தனது கலை பயணத்தை தொடங்கினார். பிற மொழிகளை ஒப்பிடும் பொழுது தமிழ் மற்றும் கன்னட மொழியில் தான் இவர் அதிக அளவிலான பாடல்களை பாடி இருக்கிறார். ஆறு தலைமுறை நடிகர்களோடு, கிட்டத்தட்ட 70 ஆண்டுகளாக அவர் இந்த கலை உலகில் மிகச்சிறந்த பாடகியாக இன்றளவும் பயணித்து வருவது குறிப்பிடத்தக்கது. கின்னஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், ஏசியா புக் ஆஃப் ரெகார்ட்ஸ் உள்ளிட்ட பல சாதனை புத்தகங்களில் இடம் பெற்ற பி சுசீலாவிற்கு வயது இப்போது 89.
"அதற்கும்" தேவி ஸ்ரீ பிரசாத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்ல; கங்குவா பட இசை - ஞானவேல் கொடுத்த விளக்கம்!