இசைஞானி இளையராஜா கடந்த மார்ச் 8 ஆம் தேதி லண்டனில் தனது சிம்பொனி வேலியண்ட் இசை நிகழ்ச்சியை அரங்கேற்றினார். இதற்கு முன்பு வெளிநாட்டு கலைஞர்கள் சிம்பொனியை இசையை அரங்கேற்றிய நிலையில், ஆசியாவிலேயே முதல் முறையாக சிம்பொனி இசையை அரங்கேற்றிய முதல் இசையமைப்பாளர் என்ற சாதனையை இளையராஜா படைத்தார்.
24
சமீபத்தில் பிரதமரை சந்தித்த இளையராஜா:
வெறும் 35 நாட்களிலேயே உருவாக்கப்பட்டது இளையராஜாவின் முதல் சிம்பொனி இசை இது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து நாடு திரும்பிய அவருக்கு, நாடு முழுவதிலுமிருந்து வாழ்த்து குவிந்து வருகிறது. இவ்வளவு ஏன் பிரதமர் மோடி கூட நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.
சிவகுமார் மற்றும் சூர்யா இளையராஜாவுக்கு நேரில் வாழ்த்து
இந்த நிலையில் தான் நடிகர் சிவகுமார் தனது மகன் சூர்யா மற்றும் மகள் பிருந்தாவுடன் நேரில் சென்று இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது சிவகுமார் தங்கசங்கிலி ஒன்றை பரிசாக அணிவித்தார். சூர்யா மற்றும் பிருந்தா இருவரும் பூங்கொடுத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
44
தங்க சங்கிலி அணிவித்து வாழ்த்து கூறிய சிவகுமார்
சிவகுமார் நடிப்பில் வந்த அன்னக்கிளி படத்திற்கு தான் இசையமைப்பாளர் இளையராஜா முதல் முறையாக இசையமைத்தார். இந்தப் படம் தான் இளையராஜாவை இசையமைப்பாளராக அறிமுகம் செய்து வைத்தது. இந்த ப்படத்தைப் போன்று நான் பாடும் பாடல், சிந்து பைரவி, ஆனந்த ராகம், பாச பறவைகள், ஒருவர் வாழும் ஆலயம் என்று பல சிவகுமாரின் படங்களுக்கு இசையமைத்துள்ளார். 80 வயதிலும் இசை மீது உள்ள காதலால் இசைத்துறையில் பல சாதனைகளை செய்து வரும் இளையராஜா இதுவரை 1000-தீர்க்கும் மேற்பட்ட படங்களுக்கும், 15,000-திற்கும் மேற்பட்ட பாடல்களையும் இசையமைத்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.