தமிழ் திரையுலகில் இயக்குனர், இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பன்முகத்திறமை கொண்டவராக வலம் வந்தவர் கங்கை அமரன். அவரின் மகன்கள் வெங்கட் பிரபு, பிரேம்ஜி இருவருமே சினிமாவில் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக வெங்கட் பிரபு ஆரம்பத்தில் நாயகனாக வேண்டும் என்கிற கனவோடு படங்களில் நடித்து வந்தார். பின்னர் நடிப்பு செட் ஆகாததால், படம் இயக்க வந்த வெங்கட் பிரபு, சென்னை 28 படம் மூலம் இயக்குனராக தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார்.