அவர் அஜித் படத்தை ரிலீஸ் செய்ததன் பின்னணியில் மிகப்பெரிய மாஸ்டர் பிளான் உள்ளதாக கூறப்படுகிறது. அஜித்தின் தெகிம்பு திரைப்படம் திட்டமிட்டபடியே ஜனவரி 11-ந் தேதி ரிலீசாகி விட்டது. அப்படத்தினை மூன்று நாட்கள் மட்டும் ஓட்டிவிட்டு, அதன்பின் அப்படத்தை தூக்கிவிட்டு அதற்காக ஒதுக்கிய தியேட்டர்களில் வாரசுடு படத்தினை வருகிற ஜனவரி 14-ந் தேதி முதல் திரையிட உள்ளாராம் தில் ராஜு.
ஆந்திராவில் உள்ள பெரும்பாலான தியேட்டர்கள் அவரது கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன. இதனால் ஜனவரி 14-ந் தேதிக்கு பின் தெகிம்பு படம் வாஷ் அவுட் ஆகிவிடக் கூட வாய்ப்பு உள்ளதாக டோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.
இதையும் படியுங்கள்... பிரபல நடிகரை காதலிக்கும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி? நெருக்கமாக புகைப்படத்தோடு வெளியிட்ட வைரல் பதிவு!