'வாணி ராணி' சீரியல் நடிகைக்கு கொரோனா பாசிட்டிவ்...! சீரியல் பணி துவங்கியதால் நடந்த விபாரீதம்!

First Published Jul 1, 2020, 4:59 PM IST

கடந்த மாதம் சீரியல் பணிகள் மீண்டும் துவங்கிய நிலையில்.. தற்போது நடிகை நவ்யா சுவாமி என்பவருக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதியாகியுள்ளது சின்னத்திரை பிரபலங்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நவ்யா சுவாமி கடந்த வருடம் நிறைவடைந்த வாணி ராணி சீரியலில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

கொரோனா வைரஸ் ஒருபுறம் அச்சுறுத்தி வந்த நிலையில், திரையுலகில் பணியாற்றி வரும், சீரியல் நடிகர்கள் மற்றும் மற்ற தொழிலாளர்களின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு, கடந்த மாதம் சீரியல் பணிகள் துவங்கியது.
undefined
உரிய பாதுகாப்புடன் சீரியல் பணிகள் துவங்கிய போதிலும், பெங்களூரை சேர்ந்த, சீரியல் நடிகை நவ்யா தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
undefined
வாணி ராணி, ரன் போன்ற தமிழ் சீரியல்களிலும், அமே கதா, நா பெரு மீனாட்சி போன்ற தெலுங்கு சீரியல்களிலும் நடித்து வருகிறார்.
undefined
நவ்ய சுவாமி தற்போது தனிமைப்படுத்தலில் உள்ளார். இந்நிலையில் தெலுங்கு சீரியல் படப்பிடிப்பின் போது அந்த டிவி நிர்வாகம் அனைத்து நடிகர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்துள்ளது.
undefined
இந்த பரிசோதனையில் நவ்யா சுவாமிக்கு கொரோனா இருப்பது உறுதியானது.
undefined
இதனை தொடர்ந்து தற்போது நவ்யா தனிமை படுத்தப்பட்டு தீவிர சிகிச்சையில் இருப்பதான கூறப்படுகிறது
undefined
கடந்த சில தினங்களாக தொடர்ந்து சீரியல் பணிகளில் இவர் கலந்து கொண்டதால், கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழ் சீரியல்களில் மிகவும் பிரபலமான இவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது இவருடைய ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
undefined
click me!